அமராவதி/புதுடெல்லி: நான்காம் கட்டமாக 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 63.01 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆந்திராவில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 2 இடங்களில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேற்குவங்கத்தின் பல்வேறு இடங்களில் திரிணமூல் காங்கிரஸார், பாஜகவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7 ஆகிய தேதிகளில் 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. 4-ம் கட்டமாக 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment