அபராதம் கட்ட முடியாமல் சிறையில் வாடும் ஏழைக் கைதிகளுக்கு உதவி: மத்திய பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு
புதுடெல்லி: தங்களது தவறுக்கான தண்டணைக் காலம் முடிந்தும், அபராதம் கட்ட முடியாமல் பல ஏழைக் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு உதவ மத்திய அரசு ரூ.20 கோடியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பலர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு உள்ளாவதும் வழக்கமாக உள்ளது. இதற்கான நீதிமன்ற வழக்குகளின் போது அக்கைதிகளுக்கு நீதிபதிகள் தண்டனை அளிப்பதுடன் குறிப்பிட்ட தொகைகளை அபராதங்களாகவும் விதிப்பது உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment