புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கோகுல்புரி பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதியம் 3.15 மணி அளவில் இந்த பயங்கர செயல் அரங்கேறியுள்ளது. ஹீரா சிங் என்பவர் தனது மனைவி சிம்ரன்ஜித் கவுர் உடன் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கோகுல்புரி பாலத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனமும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டது இதற்கு காரணம் என தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment