புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம் பத்ராபுத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கமலா புஜாரி (76). இயற்கைவழி வேளாண்மையை ஊக்குவித்து வந்த இவர், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வந்தார். இவருடைய இந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில், காய்ச்சல் மற்றும்வயது மூப்பு காரணமாக கோராபுட் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, கட்டாக் நகரில் உள்ளஎஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலையில் தெரிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment