கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக அழைப்பு விடுத்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்து முடங்கியது. பாஜக மூத்த தலைவர் பிரியங்கு பாண்டேவின் கார் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில், அவரது கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் நேற்றுமுன்தினம் தலைமைச் செயலகம்நோக்கி பேரணி சென்றனர். மாணவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment