
புதுடெல்லி: டெல்லியில் குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் இளம்பெண் வீட்டில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவ்வீட்டின் உரிமையாளரும், அவரது மகன்களும் கைதாகி உள்ளனர்.
டெல்லியின் கிழக்கு பகுதியிலுள்ள ஷக்கூர்பூர் பகுதியில் ஓர் இளம்பெண் வாடகை வீட்டில் வசிக்கிறார். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இப்பெண் குடிமைப் பணி தேர்வு எழுதுவதற்காகப் பயிற்சி பெற்று வருகிறார். இவரது வீட்டின் குளியலறை மற்றும் படுக்கை அறையில் ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்துள்ளது. இதை யதேச்சையாகப் பார்த்து அதிர்ந்த அந்த இளம்பெண் ஷக்கூர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment