
கொல்கத்தா: பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்திவரும் கொல்கத்தா மருத்துவர்கள், பணிக்கு திரும்புமாறு உச்ச நீதிமன்றம் விதித்த கெடுவை ஏற்க மறுத்துவிட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு செப்.10-ம் தேதி (நேற்று) மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment