
லக்னோ: காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, தனது கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத குழுவின் தலைவராக மாறிக் கொண்டிருக்கிறார். தேசத்தின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை அழித்து, உள்நாட்டுப் போரை நோக்கி தள்ளுவதுதான் அவரது நோக்கமாக உள்ளது. இப்போது தேசத்திலிருந்து இடஒதுக்கீட்டை ரத்து செய்ய சதி செய்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment