மும்பை: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக்கின் கொலையை அரசியலாக்க வேண்டாம் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அஜித் பவார் கூறியதாவது: “மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறோம். இந்த கொடூர சம்பவத்தை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். இது வெறும் அரசியல் ரீதியான இழப்பு மட்டுமல்ல, இது எங்கள் அனைவரையும் உலுக்கியுள்ள தனிப்பட்ட இழப்பு. இந்த கொடூர நிகழ்வை யாரும் தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் லாபங்களுக்காக அடுத்தவர்களின் வலியை பயன்படுத்திக் கொள்ள இது நேரமல்ல. இப்போதைக்கு சரியான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment