ஹைதராபாத்: சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை (அக்.30) முதல் அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு ஒரு ஆண்டுகாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது தற்போது சைவப் பிரியர்களுக்காக முட்டை கலக்காமலும் செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment