மும்பை: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவும் சீனாவும் விரைவில் ரோந்துப் பணியைத் தொடங்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் 2020 அக்.31-க்கு முந்தைய ரோந்து நிலைமை மீண்டும் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கு சிறிது காலம் எடுக்கும். அக்டோபர் 21-ம் தேதி ஏற்பட்ட சமீபத்திய ஒப்பந்தம், எல்லைப் பகுதிகளில் ரோந்து செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குகிறது. இரண்டு நாடுகளும் 2020-க்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவதற்கு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment