புதுடெல்லி: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை துபாய் காவல் துறை சவுரப் சந்திரகரை கைது செய்தது. இந்நிலையில் அவரை இந்தியா அழைத்து வரும் நடவடிக்கையை அமலாக்கத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர், ரவி உப்பால் ஆகிய இருவர் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். அதன் மூலம் அவர்கள் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment