இம்பால்: மணிப்பூரில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்ட 6 நபர்களில் 3 பேரின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து சம்பந்தப்பட்ட 5 மாவட்டங்களில் பதற்றம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment