புதுடெல்லி: சீல் வைத்த கடைகளை திறப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.3.79 கோடி ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் உள்ள டெல்லி நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியத்தின் (டியுஎஸ்ஐபி) சட்டத் துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜய் மேகோ. டெல்லியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் கரண் குப்தா என்பவர் இவரை அணுகினார். கரண் குப்தாவுக்கு டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் மினிஸ்ட்ரி ஆஃப் கேக்ஸ், ஸ்ரீ சன்வாரியா ஸ்வீட்ஸ் என்ற பெயரில் 2 கடைகள் இருப்பதாகவும், அந்த கடைகளுக்கு வீட்டு வசதி மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்து விட்டதாகவும் விஜய் மேகோவிடம் தெரிவித்தார். கடந்த 2023 ஜூலையில் சட்டவிரோத கட்டிட பிரச்சினை தொடர்பாக அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கரண் குப்தா தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment