இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது இரண்டு வயது குழந்தை உட்பட 6 பேர் கட்டத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்டவர்களில் மூன்று பேர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரையும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர் .மீண்டும் கலவரம் வெடிதத்தைத் தொடர்ந்து ஜிரிபாம் மாவட்டத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மைதேயி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையைத் தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதுமான சூழல்காணப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment