மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
மும்பை: மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நேற்று மாலை 5 மணி வரை 58 சதவீத வாக்குகள் பதிவாகின. ஜார்க்கண்ட்டில் இன்று நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 68 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் இரு மாநிலங்களிலும் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக இங்கு 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மகாராஷ்டிரா முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment