Skip to main content

டெல்லிக்குள் லாரிகள் நுழைவதை தடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான "கிராப்" 4 விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ம் தேதி உத்தரவிட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி டெல்லி நகருக்குள் லாரிகள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி நகருக்குள் லாரி அத்துமீறி நுழைவது குறித்து டெல்லி அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது, டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லாரிகள் நுழைவதற்கான பிரத்யேகமான 13 வழிகள் உட்பட, 113 நுழைவு வாயில்கள் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்