ராஞ்சி: ஜார்க்கண்ட் மதரசாக்களில் வங்கதேச முஸ்லிம்கள் பதுங்கி உள்ளனர். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி வருகின்றனர். இதற்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு ஆதரவு அளிக்கிறது என்று மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா குற்றம் சாட்டி உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. வரும் 20-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டம், கோமியா பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment