கொச்சி: கேரளாவில் ‘கலெக்டர் ப்ரோ’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அழைக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் மற்றொரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியை ஆன்லைனில் கிண்டல் செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரள அரசின் விவசாயத் துறை சிறப்பு செயலராக இருப்பவர் என்.பிரசாந்த் ஐஏஎஸ். 2007 பேட்சை சேர்ந்த பிரசாந்த், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 2015ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சமூக வலைதளங்களில் தன்னுடைய செயல்பாடுகளால் மிகவும் பிரபலமானார். இளைஞர்கள் பலரும் அவரை அன்போடும் உரிமையோடும் ‘கலெக்டர் ப்ரோ’ என்று அழைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment