ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கன்டாபள்ளி கிராமத்தில் ஒரு குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வந்தது. இந்த கிராமம் போனாய் வனப்பகுதிக்கு அருகே உள்ளது. அங்கு காட்டு யானை ஒன்று நேற்று வந்து குடிசை வீட்டை சேதப்படுத்தியது. யானையை பார்த்ததும் வீட்டில் இருந்த பெரியவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த வீட்டில் சமியா முண்டா (12), சாந்தினி முண்டா (3) என்ற இரு சகோதரிகள் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை காட்டு யானை மதித்து கொன்றது. இச்சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment