‘வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்த இரக்கமுள்ள சீர்திருத்தவாதி!’ - மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் புகழஞ்சலி
புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்த இரக்கமுள்ள, சீர்திருத்தவாதத் தலைவர் என்றும், கருணை, பணிவு, கண்ணியம் ஆகிய அரிய பண்புகளைக் கொண்ட தலைவர் என்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் செயற்குழு புகழாரம் சூட்டியுள்ளது.
மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழுவின் இரங்கல் தீர்மானம் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment