மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவை நாளை (டிச. 14) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் மகாயுதி கூட்டணி 235 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 5-ம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றார். துணை முதல்வர்களாக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் அஜித் பவாரும் பதவியேற்றனர். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment