‘‘மனைவியின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவே ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்படுகிறது. அதை கணவனுக்கு விதிக்கப்படும் அபராதமாக கருதக் கூடாது’’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் செய்த தம்பதி கடந்த 2004-ம் ஆண்டு பிரிந்துள்ளனர். கணவர் துபாயில் உள்ள ஒரு வங்கியின் சிஇஓ. மாதம் 50,000 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்காம் (ரூ.11 லட்சம்) சம்பளம் வாங்குகிறார். இவரது 3 அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.17 கோடி. மனைவி இல்லத்தரசி. இவர்களின் ஒரே மகன் தற்போது இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment