ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனிதாபிமானத்தால் குடிசை வீட்டில் வாழ்ந்த தொழிலாளியின் குடும்பத்தினர் கான்கிரீட் வீட்டில் குடியேற உள்ளனர்.
ஆந்திர அரசு சார்பில் மூத்த குடிமக்கள், கணவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஓய்வூதியம், நிதியுதவி வழங்கப்படுகிறது. ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 1-ம் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், பெனுமாகு கிராமத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்றார். அங்கு குடிசை வீட்டில் வசித்த தொழிலாளி பானாவத் நாயக், அவரது மனைவி சீதம்மாவை முதல்வர் சந்தித்து பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment