உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ரொட்டி பரிமாற தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்திய வினோதமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தவுலி மாவட்டம் ஹமித்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மெஹ்தாப். இவருக்கு டிசம்பர் 22-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணமகன் வீட்டார் அனைவரும் அன்று மகிழ்ச்சியுடன் ஒன்று கூடினர். ஆனால், அந்த மகிழ்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. மணமகன் உறவினர்களுக்கு ரொட்டி பரிமாறுவதில் பெண் வீட்டார் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைடந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதனால், விரக்தியடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறொரு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைக்கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment