புதுடெல்லி: மத்திய கல்வித் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் இன்று (ஜன.15) காசி தமிழ்ச் சங்கமம் 3.0 அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கேடிஎஸ் 3.0-வின் மையக்கருவாக அமைந்துள்ள அகத்தியரின் பெருமைகளை எடுத்துரைத்தார்.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் மூன்றாவது காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. வரும் பிப்ரவரி 15 முதல் 24 தேதிகள் வரையிலான நிகழ்ச்சியில் மையக்கருவாக அகத்தியர் இடம் பெற்றுள்ளார்.இதற்கான அறிவிப்பை இன்று டெல்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் மோடி இந்திய மாநிலங்களின் கலாச்சாரங்களை இணைக்கும் பணியை செய்து வருகிறார். இந்தவகையில், காசியுடன் தமிழகத்துக்கு இருக்கும் பாரம்பரியக் கலாச்சாரத் தொடர்புக்கு புனர்ஜீவிதம் அளிக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமத்தை துவக்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment