கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20 சதவீதத்தை பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் அளித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது. இவர்களில் 64 பேர் டிஜிபி தலைமையிலான குழு மூலமாக ரூ.51,202 பரிசு பெற்றனர். 169 பேர் உள்துறை மூலமாக ரூ. 6,36,86,664 பரிசு பெற்றுள்ளனர். 737 பேர் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மூலம் ரூ.5,13,40, 680 பரிசு பெற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment