மும்பை: மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பால் தாக்கரேவின் 99-வது பிறந்த நாளையொட்டி மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதை, அதற்கு தகுதியற்ற சிலருக்கு வழங்கியுள்ளது. ஆனால் நாட்டில் இந்துத்துவாவின் விதைகளை உண்மையிலேயே விதைத்த பால் தாக்கரேவுக்கு வழங்கப்படவில்லை. இன்னும் ஓராண்டில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு வருகிறது. நூற்றாண்டு தொடங்குவதற்கு முன் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது அவசியம்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment