ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு
திருவனந்தபுரம்: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்சியார் பஞ்சாயத்துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பழங்காலத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்நாட்டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறியவர்கள். இந்த பழங்குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment