புதுடெல்லி: மகா கும்பமேளாவுக்கு செல்ல தலைநகர் டெல்லியில் உள்ள புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்.15) அன்று கூட்டம் அலைமோதிய காரணத்தால் சுமார் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாக 4 பெண்கள் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு சுமார் 10 மணி அளவில் மகா கும்பமேளாவுக்கான ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பயணிகளும் பீதி அடைந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கியவர்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment