ஆண்டுக்கு 1 லட்சம் பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா இலக்கு: தேசிய திறன் மேம்பாட்டு கழகம் தகவல்
இன்னும் 2 ஆண்டுகளில் ஜப்பான், இஸ்ரேல், ஜெர்மனி உட்பட இதர வெளி நாடுகளில், ஆண்டுக்கு 1 லட்சம் பேரை திறன் சார்ந்த வேலைகளில் பணியமர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
2030-ம் ஆண்டு செயல் திட்டத்தை வெளியிட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (என்எஸ்டிசி) கூறியிருப்பதாவது: திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற என்எஸ்டிசி முயற்சிக்கிறது. இதற்காக திறன்மேம்பாட்டு மையங்கள் விரிபடுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் 50 எதிர்கால திறன் மையங்கள், 10 சர்வதேச அகாடமிகள் ஆகியவை தொடங்கப்படவுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment