புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) இன்று மாலை துவங்கியது. இதை துவக்கி வைத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அனைவருக்கும் வணக்கம்’ எனத் தமிழில் தெரிவித்தார்.
வாரணானாசியின் கங்கை கரையிலுள்ள நமோ காட்டில் இன்று கேடிஎஸ் 3.0 நிகழ்ச்சி தொடங்கியது. துவக்கத்தில், தமிழகக் கலைஞர்களின் நாதஸ்வரம், மேளதாள மங்கள இசை முழங்கியது. இந்நிகழ்ச்சியை மின்சாரப் பொத்தான் அழுத்தி உ.பி முதல்வர் யோகி துவக்கி வைத்தார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment