புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரியாக இருந்தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றி இருந்தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.
கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்கிருத மகா வித்யாலயாவில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவையிலும் பங்கேற்றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உள்ளே வைக்கப்பட்டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திரமாகப் பாதுகாத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment