புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஓராண்டு சிறப்பு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நீதித் துறை உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சில விவகாரங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டப்பேரவைகளுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது கருத்துகளை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment