சாலை விபத்துக்களை குறைக்க ரூ.10 லட்சம் கோடி செலவில் 23,000 கி.மீ நீளமுள்ள இருவழி நெடுஞ்சாலைகள் 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மக்களவை கேள்வி நேரத்தின் போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதிகட்கரி கூறியதாவது: இருவழி நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடி செலவில் 25,000 கி.மீ தூரத்துக்கு நான்கு வழிச் சாலைகளாக அகலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இத்திட்டங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், விபத்துக்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment