புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சரவரம்பை அதிகரிக்க கோரப்பட்டுள்ளது. மக்களவையில் கனிமொழி எம்.பி இதற்காக அவசர கோரிக்கை விடுத்தார். பொது அவசரம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை மக்களவையில் எழுப்ப விதி எண் 377 அனுமதிக்கிறது. இதன் அடிப்படையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை ஒரு கோரிக்கை எழுப்பினார்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களுக்கான இந்த கோரிக்கை மீது தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி பேசியதாவது: பட்டியல் சமூகம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment