காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை, வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக ஏப்ரல் 3-ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.
கடந்த 2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக பிரமுகர் விஜய் மிஸ்ரா தொடந்த இந்த வழக்கை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment