மீரட்: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்தவர் சவுரப் ராஜ்புத். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் மஸ்கன் ரஸ்தோகி. இருவரும் பள்ளி பருவம் முதல் ஒன்றாக படித்து வந்துள்ளனர். 13 வயது முதலே இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
12-ம் வகுப்புக்கு பிறகு சரக்கு கப்பல் சார்ந்த படிப்பை நிறைவு செய்த சவுரப், லண்டனை சேர்ந்த பிரபல சரக்கு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதன்பிறகு சவுரப் ராஜ்புத்தும் மஸ்கன் ரஸ்தோகியும் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டில் லண்டனில் இருந்து மீரட் திரும்பிய சவுரப் திடீரென காணாமல் போனார். அவரும் மஸ்கன் ரஸ்தோகியும் ரகசிய இடத்தில் வாழ்ந்தனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீரட் போலீஸார் இருவரையும் கண்டுபிடித்தனர். இதேபோல அடுத்தடுத்து 2 முறை சவுரபும், மஸ்கனும் காணாமல் போயினர். கடந்த 2016-ம் ஆண்டு இறுதியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment