சமாஜ்வாதி கட்சி எம்.பி ராம்ஜி லால் சுமன் வீடு மீது கர்னி சேனா தொண்டர்கள் நடத்திய தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி, எதிர்க்கட்சி எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர்.
சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ராம்ஜி லால் சுமன். இவர் உ.பி.யின் மேவர் பகுதியை ஆண்ட ராஜ்புத் ஆட்சியாளர் ராணா சங்கா பற்றி விமர்சித்திருந்தார். ‘இப்ராகிம் லோடியை வீழத்துவதற்காக பாபரை அழைத்து வந்த ராணா சங்கா ஒரு துரோகி’ என கூறியிருந்தார். இது ராஜ்புத் பிரிவைச் சேர்ந்த கர்னி சேனா அமைப்பினரை கோபம் அடையச் செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment