புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ஜம்மு - காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கராவதிகளுடன் புதன்கிழமை மாலை தொடங்கி பாதுகாப்பு படையினர் சண்டையிட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பிரதமர் மோடியின் இல்லத்தில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மலைப் பகுதியில் ராணுவ சீருடையில் இருந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்ததன் தொடர்ச்சியாக, குல்காம் பகுதியில் புதன்கிழமை மாலை தொடங்கி தீவிரமான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment