ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்
ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் அருகே குல்சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வளாகத்தின் தரைதளத்தில் நகைக் கடைகளும், மேல்தளங்களில் வீடுகளும் உள்ளன. இங்கு நேற்று அதிகாலை 4 மணி அளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment