கடப்பா: “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்” என தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டுக் கூட்டத்தில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். .
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது பிரதமர் மோடி வசம் தேசத்தின் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக அறிக்கை ஒன்றை வழங்கியிருந்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது ரூ.500, ரூ.1,000 மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை தனது பேச்சில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment