மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் 28 ஆண்டுகள் பணியாற்றிய சுமன் பெரி தற்போது நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment