புதுடெல்லி: அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment