துடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என்று `தக் லைஃப்' பட இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசியதற்கு எதிராக க‌ர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘‘கமல்ஹாசன் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை திரையிட முடியாது''என்று கூறி, மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment