Skip to main content

Posts

Showing posts from September, 2021

கொள்கை மீது தொண்டர்கள் விசுவாசம் : பாஜக.வினருக்கு ஜே.பி. நட்டா பாராட்டு

உத்தராகண்டில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உத்தராகண்டை பொறுத்தவரை ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், உத்தராகண்டில் பாஜக தொண்டர்களுடன் தேசியக் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மூத்த குடிமக்களுக்கு தனி ‘ஹெல்ப்லைன்’- வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்

மூத்த குடிமக்களுக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ‘ஹெல்ப் லைன்’ வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான இன்று (அக்.1), இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமலையில் பஜனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

திருமலையில் பஜனைகள் நடத்த அறங்காவலர் குழுவினரும் அதிகாரிகளும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி குண்டூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் பஜனை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமலையில் அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் பஜனை குழுவினர் ஏழுமலையானை புகழ்ந்து ஆடிப் பாடுவதுவழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக திருமலையில் பஜனைகள் நடத்த தேவஸ்தான அறங்காவலர் குழு அனுமதிக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜிஎஸ்டி குறித்து தெரியாமல் பேசும் எம்பிக்கள்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம்

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனின் முதலாம் ஆண்டுநினைவு நாளையொட்டி, திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் உள்ளஅவரது நினைவிடத்தில் பாஜகமாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியது: 1980-ல் மீனாட்சிபுரத்தில் 300 குடும்பங்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி, மாற்று மதத்தைத் தழுவும்போது அதற்கான காரணங்களை ஆய்வு செய்து, அவற்றை அடியோடு மாற்ற முயற்சி செய்தவர். தீண்டாமையை வேரோடு அகற்றப் பாடுபட்டவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இயற்கை முறையில் ஊடுபயிர் விவசாயம்; விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து சாதனை: செங்கோட்டையில் பிரமிக்க வைக்கிறார் 78 வயது பொறியாளர்

தென்காசி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (78). மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், சிமென்ட் மற்றும்உரங்களை பேக்கிங் செய்வதற்கான பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினார். பின்னர், தொழிற்சாலைப் பொறுப்பை சகோதரரிடம் கொடுத்துவிட்டு, 100 ஏக்கரில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். விளைபொருட்களை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துகிறார். சீரகச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் உயரிய மா, வாழை ரகங்களை சாகுபடி செய்து, இயற்கை அங்காடிகளுக்கு விற்பனை செய்கிறார். இதுகுறித்து, ஈஸ்வரன் மேலும் கூறியதாவது: கடந்த 1976 முதல் விவசாயம் செய்து வருகிறேன். நெல் சாகுபடியில் வருவாய் கிடைக்கவில்லை. பெரும்பாலும் நஷ்டம் ஏற்படும். இதனால், 20 ஏக்கரில் நெல் சாகுபடியும், எஞ்சிய 80 ஏக்கரில் மரப்பயிர்களையும் சாகுபடி செய்துள்ளோம். ஒட்டு மா, தேக்கு, கொய்யா, நெல்லி, பலா உள்ளிட்ட பணப்பயிர்களை சாகுபடி செய்யத்தொடங்கினேன். தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை ரகங்களை சாகுபடி செய்துள்ளேன். சீரகச்சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரக...

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரத்தை அறிவிப்பு பலகையில் தனியார் பள்ளிகள் ஒட்ட வேண்டும்: தேனி மக்கள் நீதிமன்றம் உத்தரவு

தேனியைச் சேர்ந்த சிவகுமார் தனது மகன் படிக்கும் தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மாவட்ட நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் தலைமையில் உறுப்பினர்கள் குமரேசன், பிரதாப்சிங் ஆகியோர் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழைய கம்பீரத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மீண்டெழும்: தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் விரைவில் பழைய கம்பீரத்துடன் மீண்டெழும் என தருமபுரி மாவட்டம் வத்தல்மலையில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வத்தல்மலை மலைக் கிராமத்தில் பெரியூர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்று மாலை பழங்குடியினர் மற்றும் விவசாயிகளுடன் தமிழக முதல்வர் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை; 10 பேருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

போலீஸ் இன்பார்மர் என கருதி விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சியை அடுத்த ராம்ஜிநகரைச் சேர்ந்தவர் சுப்பன் என்ற பாலசுப்பிரமணியன் (60). விவசாயியான இவர், கடந்த 2013 ஜூன் 27-ம் தேதி பெரிய கொத்தமங்கலம் பகுதியில் உள்ள பொதுக் குளத்தின் கரையில் நண்பர்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கள்ளிக்குடியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஆறுமுகம் என்பவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் முதல்வருடன் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சண்டிகரில் நேற்று சந்தித்துப் பேசினார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதன்காரணமாக கடந்த 18-ம் தேதி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதானியின் ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடி: இந்தியாவின் 2-வது பணக்காரர் ஆனார்

கடந்த ஆண்டில் அதானி நாளொன்றுக்கு ரூ.1,000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் என்று ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐஐஎஃப்எல் நிறுவனம் 2021-ம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.7.18 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக முகேஷ் அம்பானி குடும்பம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் நாளொன்றுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பம் ரூ.163 கோடி அளவில் வருமானம் ஈட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலையை எப்படி முடக்க முடியும்?- விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி - உத்தரபிரதேச எல்லையில் போராட்டம் என்ற பெயரில் ஓராண்டாக நெடுஞ்சாலைகளை எப்படி முடக்க முடியும்? என விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 300 நாட்களுக்கும் மேலாக தொடரும் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி- ஹரியாணா, டெல்லி - உத்தரபிரதேசம் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.13,165 கோடிக்கு ஹெலிகாப்டர் ஏவுகணைகள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இந்திய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரூ.13,165 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், வெடிபொருட்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் ரூ.13,165 கோடிக்கு அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கி வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகாலயா தலைமை செயலராக ரெபேக்கா வனிஷா பதவியேற்பு: உயர் பதவியை எட்டிய மண்ணின் முதல் புதல்வி

மேகாலயா மாநில தலைமைச் செயலாளராக அந்த மண்ணின் புதல்வி ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுள்ளார். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் தலைமைச் செயலாளராக எம்.எஸ்.ராவ் பதவி வகித்து வந்தார். அவர் நேற்று ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக ரெபேக்கா வனிஷா சூசியாங் பதவியேற்றுக் கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெற்கு ரயில்வேயில் புதிய காலஅட்டவணை இன்று முதல் அமல்: தென்மாவட்ட ரயில்கள் உட்பட 132 ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணைஇன்றுமுதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி 132 விரைவு ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ரயில்களின் நேரத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும்ஜூலை மாதங்களில் ரயில்களின் காலஅட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புதிய காலஅட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட நிர்வாகிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார் ஓபிஎஸ்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்9 மாவட்டங்களிலும் அதிமுக நிர்வாகிகளுடன் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனை நடத்துகிறார். சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியைபறிகொடுத்த அதிமுக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாகஇறங்கியுள்ளது. இதையொட்டி, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வரு கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் 4-ம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்.1 - உலக முதியோர் தினம்: முதியோர் நலம் பேண ‘முதியோர் நலவாரியம்’ அமைக்க வேண்டும்

பத்மஸ்ரீ டாக்டர் வி.ஏஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர், சென்னை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நேபாளத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பூங்கோதை

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பொக்ராவில் அனைத்து விளையாட்டுகள் தெற்காசிய கூட்டமைப்பு சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில்இந்தியா, நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து 130 பேர் கொண்ட அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம்மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் கோவை மாவட்டம் சூலூர்பட்டணத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், ராமுத்தாய் ஆகியோரது மகள் பூங்கோதை தங்கப் பதக்கம் வென்றார். பந்தய இலக்கை அவர்24 நிமிடங்களில் கடந்து அசத்தினார். பூங்கோதை எஸ்என்எம்வி கல்லூரியில் பிஎஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீங்கள் நன்றாக நடனமாடுகிறீர்கள்: சட்ட அமைச்சரை ட்விட்டரில் பாராட்டிய பிரதமர் மோடி

அருணாச்சலப் பிரதேசத்தில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பார்வையிடச் சென்ற மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு, கிராமவாசிகளுடன் இணைந்து நடனமாடினார். அவர் அந்த நடனத்தை ட்விட்டரில் பகிர அதனைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அருணாச்சலப் பிரதேசத்தில் காஸாலாங் கிராமத்தில் விவேகானந்தா கேந்த்ரா வித்யாலா திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட அங்கு சென்றிருந்தார் அமைச்சர் கிரன் ரிஜிஜு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கிகளுக்கு அக்டோபர் மாதம் 21 நாட்கள் விடுமுறையா? - அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறையா என்பது தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வங்கிகளுக்கு அடுத்த மாதம் 21 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: அக்டோபர்மாதம் பல்வேறு பண்டிகைகள்வருவதால், நாடு முழுவதும் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை விடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் இந்திரகுமாரி வரை... ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அமைச்சர்கள்

ஊழல் வழக்கில் தண்டனை பெறும் அமைச்சர்களின் பட்டியலில் முன்னாள் அமைச்சர் புலவர்இந்திரகுமாரியும் இணைந்துள்ளார். 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் ஆர். இந்திரகுமாரி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம்: ரூ.2.60 கோடி வருவாய் அரசு கணக்கில் சேர்ப்பு

தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த, உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட்டு, அதில்கிடைத்த ரூ.2 கோடியே 60 லட்சம் அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் அல்லது காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம்விடும் அதிகாரம் வழங்கப்படும்' என்று அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; கூட்டணியில் உரிய இடங்கள் கிடைக்காதது வருத்தம்தான்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தானுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்ட ‘டீன் ஏஜ்’ தீவிரவாதி வேண்டுகோள்

காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் கடந்த 26-ம் தேதியன்று அங்கிருந்த ஒரு பதுங்குக் குழிக்குள் மறைந்திருந்த இரண்டு தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மற்றொரு தீவிரவாதி தன்னை உயிருடன் விடுமாறு வேண்டுகோள் விடுத்து ராணுவத்தினரிடம் சரணடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

60 வயது முதியோர் வேலை தேட புதிய இணையதளம் தொடக்கம்: மத்திய சமூக நீதித் துறை அறிமுகம்

அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோர் மீண்டும் வேலைவாய்ப்பை தேட, புதிய இணையதளத்தை மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் நாளை அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1951-ம் ஆண்டு 2 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை, கடந்த 2001-ம்ஆண்டு 7.6 கோடியாக உயர்ந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படிஇந்த எண்ணிக்கை 10.4 கோடியாக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சியில் இருந்து தலைவர்கள் விலகல்: காங்கிரஸுக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜக உள்ளிட்ட வேறு கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. ஆம், ஐயா என்று கூறி கீழ்படிந்து செல்பவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சியிலிருந்து தலைவர்கள் ஏன் வெளியேறி வருகின்றனர்? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தை சட்டம் இயற்றுவதால் கூட பறிக்க முடியாது: ராஜிவ் தய்யாவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டம் இயற்றுவதன் மூலம் கூட பறிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சுராஜ் இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் ராஜிவ் தய்யா. நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து வந்தார். இந்த வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லை என்று பலமுறை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் பயன்படுத்துவதை ஏற்க முடியாது: உத்தரவை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

பட்டாசுகளில் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனங்களை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்; பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம்: கரோனா பாதிப்பில் இருந்து மீ்ண்டு வரும் ரியல் எஸ்டேட்

நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் கரோனா பாதிப்பில் இருந்து ரியல்எஸ்டேட் தொழில் மீண்டு வரு கிறது. கரோனா பாதிப்பு, கட்டுமானத் தொழிலை வெகுவாகப் பாதித்தது. வீடு விற்பனை மந்தம், வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியது, பழைய வீட்டு வசதித் திட்டங்களில் கட்டப்பட்ட வீடுகளை விற்க முடியாததால், புதிய வீட்டு வசதித் திட்டங்களை தொடங்க முடியாத நிலை என பல்வேறு வழிகளில் சரிவைச் சந்தித்தது ரியல் எஸ்டேட் தொழில். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

வாக்காளர் பட்டியலில் தவறு நடந்துள்ளது என்பதற்காக உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8-வது வார்டில்வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நடந்துள்ளன என்றும், தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு ஏசி பேருந்துகளின் சேவை நாளை தொடக்கம்

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நாளை முதல் 702 ஏசி அரசு பேருந்துகளின் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல்குறைந்து வருவதையடுத்து, ஏசிபேருந்துகளின் சேவை விரைவில்தொடங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹாசனில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித் மக்கள்: உரிமையை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பேட்டி

கர்நாடக மாநிலம் கொப்பலில் கோயிலில் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ஹாசன் மாவட்டத்தின் தின்டகூரு உள்ளிட்ட பிற இடங்களிலும் தலித் மக்களை ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமித் ஷாவுடன் அமரீந்தர் சிங் ஆலோசனை; பாஜகவில் இணைய முடிவெடுத்திருப்பதாக தகவல்: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு; காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் விரைவில் இணைவார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து இதுகுறித்து பேசினார். இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் முக்கிய தலைவர் களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. அமரீந்தரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அதன்பிறகு இருவருக் கும் இடையேயான மோதல் வலுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’- பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என கணிப்பு

குஜராத் கடற்பகுதியில் ‘ஷாகீன்’ என்ற புதிய புயல் நாளை (அக்.1) காலைக்குள் உருவாகி பாகிஸ்தானை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து, நேற்று தெற்கு குஜராத் மீதிருந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவின் அதிவேக பைக் பந்தய வீராங்கனை கல்யாணி

இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்27 வயதான கல்யாணி பொடேகர். சமீபத்தில் என்சிஆரின் புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், 2.08 நிமிடங்களில் இலக்கை கடந்து அசத்தினார் கல்யாணி பொடேகர். இதன் மூலம் இந்தியாவின் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்திருந்தார் கல்யாணி பொடேகர். இதற்குமுன்னர் கல்யாணி 2.16 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்திருந்தார். இந்த சாதனையை தற்போது டுகாட்டி பனிகல் வி 4 சூப்பர் பைக் மூலம் முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாத்வான் குளோபல் கேபிடல் நிறுவனத்தின் ரூ.578 கோடி சொத்துகள் முடக்கம்: உ.பி. பி.எப். முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை

இங்கிலாந்தைச் சேர்ந்த வாத்வான்குளோபல் கேபிடல் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.578 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியுள்ளது. உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (யுபிபிசிஎல்) நிறுவனத்தின் ஊழியர்கள் சேம நல நிதி (பிராவிடன்ட் பண்ட்) ஊழல் புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனமும் (டிஹெச்எப்எல்) ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அட்டை வழங்கும் முகாம்- மனவளர்ச்சி குன்றியவர்கள் அலைக்கழிப்பு

தாம்பரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாமுக்கு வந்த மனவளர்ச்சி குன்றியவர்கள், மருத்துவர் வராததால் திருப்பி அனுப்பப்பட்டனர். தாம்பரத்தில் உள்ள தனியார்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு கை, கால்ஊனமடைந்தவர்கள், கண் பாதிக்கப்பட்டவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், வாய்பேச முடியாதவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில்பங்கேற்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு அந்தந்த குறைபாடு தொடர்பான மருத்துவர்கள் பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அப்போதுதான் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஒடுக்குவதிலேயே காவல் துறையினர் முனைப்பாக உள்ளனர்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்மையில் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் மோரூரில் பேருந்து நிலையம் அருகில் பொது இடத்தில் விசிக கொடியேற்ற காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல்கட்சிகள், ஜாதி சங்கங்கள், ரசிகர் மன்றங்களின் கொடிகள் பறக்கும்போது, விசிக கொடியை மட்டும் ஏற்ற அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்