Skip to main content

Posts

Showing posts from December, 2022

நல்லதே நடக்கும்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தை இறந்த போது பிரதமர் மோடி என்ன செய்தார்? - விஎச்பி தலைவர் திலீப் திரிவேதி நெகிழ்ச்சி

புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். டெல்லியில் இருந்து வந்த பிரதமர் மோடி, வட்நகரில் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பணிக்கு திரும்பினார். மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாயார் இறந்த நிலையிலும், உடனடியாக பிரதமர் பணிக்கு திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

2024 தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் முகமாக இருப்பார்: கமல்நாத்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்யின் பிரதமர் முகமாக ராகுல் காந்தி இருப்பார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், "2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ராகுல் காந்தி எதிர்க்கட்சியின் முகமாக மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார். உலகில் எந்த ஒரு அரசியல் தலைவருமே இத்தகைய நீண்ட பாத யாத்திரையை மேற்கொண்டதில்லை. காந்தி குடும்பத்தைத் தவிர வேறு எந்த ஒரு குடும்பமும் இத்தனை பெரிய தியாகங்களை நாட்டுக்காக செய்ததில்லை. ராகுல் காந்தி அதிகார அரசியல் செய்யவில்லை. மாறாக அவர் மக்களுக்கான அரசியலை செய்கிறார்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத்தில் சாலை விபத்து: 9 பேர் பலி; 28 பேர் காயம்

அகமதாபாத்: குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். குஜராத் மாநில நவ்சாரி மாவட்டத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது. அகமதாபாத்தில் நடந்த பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பேருந்தில் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை 48ல் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த டொயோட்டா ஃபார்ச்சுனர் காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 28 பேர் காயமடைந்தனர். இவர்களில் 11 பேர் தீவிரக் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஹீராபென் | பிரதமர் நரேந்திர மோடியை செதுக்கியவர்

காந்திநகர்: குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம், விஸ்நகரில் பிறந்த ஹீராபென் அவரது குடும்பத்தில் மூத்த பெண். அவரது 16-வது வயதிலேயே வட்நகரை சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியுடன் திருமணம் நடைபெற்றது. புகுந்த வீட்டிலும் அவர்தான் மூத்த மருமகள். இளம்வயது என்ற போதிலும்குடும்பத்தினரை அரவணைத்து செல்லும் பக்குவம் ஹீராபென்னுக்கு இருந்தது. காலை 4 மணிக்கே கணவர் தாமோதர்தாஸ் கடைக்கு சென்றுவிடுவார். அவருக்காக அதிகாலையிலேயே ஹீராபென் எழுந்துவிடுவார். தாய், தந்தையை பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்றளவும் அதிகாலையில் எழும் பழக்கத்தை பின்பற்றுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எளிமையானவர், அன்பானவர், இனிமையானவர் : அக்கம்பக்கத்தினர் உருக்கம்

காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் தலைநகர் காந்திநகரில் ரேசான் பகுதியில் இளையமகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்தார். அப்பகுதியை சேர்ந்த கீர்த்திபென் என்பவர் கூறும்போது,”கடந்த 7 ஆண்டுகளாக ஹீராபென் இங்கு வசிக்கிறார். அவரை நாள்தோறும் சந்திப்போம். அவர் எளிமையாக வாழ்ந்தார். அனைவரிடமும் அன்பு செலுத்தினார். இந்த குடியிருப்பின் ராஜ மாதாவாக இருந்தார். எனது சொந்த தாயை இழந்தது போன்று உணர்கிறேன்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 பள்ளிகளுக்கு பெயர் மாற்றம்

சண்டிகர் : பஞ்சாபில் ஜாதி குறியீடு கொண்ட 56 அரசுப் பள்ளிகளுக்கு அம்மாநில அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. பஞ்சாபில் ஜாதி அடிப்படையில் பெயர் கொண்ட பள்ளிகளின் பெயரை மாற்றுமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமரின் தாயார் 100-வது வயதில் காலமானார் - அரசு மரியாதை தவிர்ப்பு; எளிமையான இறுதிச் சடங்கு

காந்திநகர் : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்று காலமானார். குஜராத் தலைநகர் காந்திநகரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதை இல்லாமல், எளிமையான முறையில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. 1923 ஜூன் 18-ம் தேதி குஜராத்தின் மெஹ்சானா மாவட்டம் விஸ்நகரில் பிறந்தவர் ஹீராபென். அருகில் உள்ள வட்நகரைச் சேர்ந்த தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடியை சிறுவயதிலேயே திருமணம் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்

குஜராத் : உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 100. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மாநில சிறையில் சாவர்க்கர் படம் திறப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு நிகழ்ச்சிகளிலும் இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் வீர சவார்க்கரின் படம் இடம் பெறுகிறது. கடந்த 19-ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸின் எதிர்ப்புக்கு மத்தியில் சவார்க்கரிடம் படம் திறக்கப்பட்டது. இதனால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா சிறையில் சாவர்க்கரின் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. க‌ர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், வீர சாவர்க்கரின் புகைப்படத்தை திறந்துவைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் நடிகை ரியா குமாரி கொலையில் கணவரை கைது செய்தது கொல்கத்தா போலீஸ்

ஹவுரா : ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி என்கிற இஷா அய்லா (32). இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ரியா குமாரி நேற்று முன்தினம் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் கொல்கத்தாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் உலுபெரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ரியா தலையில் காயத்துடன் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க புதிய ‘ஆர்விஎம்’ இயந்திரம் அறிமுகம் - ஜன. 16-ம் தேதி செயல் விளக்கம்

புதுடெல்லி : உள்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. இது தொடர்பாக ஜன. 16-ம் தேதி நடைபெறும் செயல் விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தேசிய, மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ‘ஆர்விஎம்’ (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்த 40 நாட்களுக்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

புதுடெல்லி : சீனாவில் கரோனா ஒமிக்ரான் வகை புதிய தொற்று அதிகரித்து வருகிறது. அண்டை நாடான இந்தியாவிலும் கரோனா தொற்றுஅதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் அடுத்து வரும் 40 நாட்களும் முக்கியமான நாட்களாக இருக்கும் என்றும், கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு கிழக்கு ஆசிய மண்டலத்தில் கரோனா அலை ஏற்பட்ட 30 முதல் 35 நாட்களில் இந்தியாவில் அதன் பாதிப்பு ஏற்பட்டு தீவிரமானதாக மாறியது. இந்தநிலையில் கடந்த 3 ஆண்டு களாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாரத் பயோடெக், பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு

ஹைதராபாத் : ஹைதராபாத்தில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான பயோலாஜிக்கல் இ மற்றும் பாரத் பயோடெக்கிடம் 25 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளன. அதிகபட்சமாக பயோலாஜிகல் இ நிறுவனத்திடம் 20 கோடி டோஸ்களும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் 5 கோடி டோஸ்களும் உள்ளன. பயோலாஜிகல் இ நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் விக்ரம் பரத்கர் கூறுகையில், “நாங்கள் 30 கோடி கார்ப்வேக்ஸ் டோஸ்களைத் தயாரித்தோம். இவற்றில் 10 கோடி டோஸ்களை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசுக்கு வழங்கினோம். மீதம் 20 கோடி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. ஆர்டர் கிடைத்ததும் உடனே அனுப்பும் வகையில் அவை தயார் நிலையில் உள்ளன” என்று தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதி உயிரிழப்பு

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கிச் சென்ற ஒரு லாரியை சித்ரா பாலம் அருகில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு படையினர் நேற்று சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். லாரி டிரைவர் தப்பியோடியதை தொடர்ந்து லாரியை சோதனையிட முயன்றனர். அப்போது லாரியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில்லாரி தீப்பற்றியது. தீயணைப்பு படை யினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லாரியில் கருகிய நிலையில் இருந்த 4 தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 ஏகே-47 ரக துப்பாக்கிகள், 3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளை அடையாளம் காணும் பணி நடக்கிறது தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா | சந்திரபாபு நாயுடுவின் பேரணியில் கூட்ட நெரிசல் - கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழப்பு

நெல்லூர் : ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சாலைப் பேரணியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, "இதேமி கர்மா மன ராஷ்டிரனிகி (நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?)" என்ற பிரச்சாரத்தை ஆந்திர மாநிலத்தில் யாத்திரை சென்றுவருகிறார். பேரணியின் ஒருபகுதியாக கந்துகூர் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற இருந்தார். அதன்படி, நாயுடுவின் கான்வாய் மாலையில் அப்பகுதியை அடைய தொடங்கியதும் நெரிசல் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான மக்கள் சந்திரபாபு நாயுடுவை முண்டியடித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்முவில் என்கவுன்ட்டர் | 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: மேலும் ஒருவரை தேடுகிறது பாதுகாப்புப் படை

ஜம்மு: ஜம்முவில் இன்று காலை வாகன சோதனையின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து ஜம்முவின் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், "இன்று காலை வழக்கம் போல் ஜம்முவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். சுமார் 7 மணி அளவில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாகனம் வந்தது. பொதுவாக அந்த நேரத்தில் அந்தப் பகுதி வழியாக அப்படியான டிரக் ஏதும் வருவதில்லை. சரி வாகனம் அருகே வரவும் சோதனை செய்யலாம் என்றிருந்தோம். அப்போது, திடீரென்று வாகனத்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் சிறுநீர் கழிக்கச் செல்வது போல் மறைவான பகுதிக்குச் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரம் திரும்பவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் நாங்கள் அந்த வாகனத்தை நெருங்கினோம். அப்போது வாகனத்திலிருந்து எங்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் வந்தன. உடனே நாங்கள் சுதாரித்துக் கொண்டு ...

முக்கிய 7 நகரங்களில் 3.65 லட்சம் வீடு விற்பனை: அனராக் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சென்னை, கொல்கத்தா, டெல்லி-என்சிஆர், மும்பை மெட்ரோபாலிட்டன் மண்டலம் (எம்எம்ஆர்), பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய 7 நகரங்களில் நடப்பாண்டில் 3.65 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் காணப்படாத அதிகபட்ச விற்பனை அளவாகும். இதற்கு முன்பாக, கடந்த 2014-ம் ஆண்டில்தான் இந்த முக்கிய 7 நகரங்களில் வீடு விற்பனையானது 3.43 லட்சம் என்ற சாதனை அளவை தொட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்த சாதனை விற்பனை அளவு முறியடிக்கப்பட்டுள்ளது. கடன் வட்டி அதிகரிப்புக்கிடையிலும் இது சாத்தியமாகியுள்ளது. கடந்த 2021-ல் முக்கிய 7 நகரங்களில் குடியிருப்புகள் விற்பனையானது 2,36,500-ஆக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மைசூருவில் கார் விபத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் காயம்: இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தகவல்

பெங்களூரு : பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி சென்ற கார் மைசூருவில் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த பிரஹலாத் மோடி உள்ளிட்ட 6 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி (66). தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அரண்மனையை பார்த்துவிட்டு பந்திப்பூர் தேசிய உயிரியல் பூங்காவுக்கு மெர்சடிஸ் பென்ஸ் எஸ்யூவி காரில் சென்றார். கட்கலா என்ற இடத்தில் சென்றபோது கார் சாலையோர தடுப்பின் மீது மோதி விபத்தில் சிக்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து பெங்களூரு வந்த 12 பேருக்கு கரோனா

பெங்களூரு : சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த 12 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 பேரின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி பரிசோதனை மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்த 37 வயதான பயணி உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக சீனாவுக்கு சென்று விட்டு பெங்களூரு வந்த போது கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவை எதிர்கொள்ள நாடு முழுவதும் பயிற்சி ஒத்திகை: டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட வெளிநாடுளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கரோனா பரவலை எதிர்கொள்ள இந்தியா தாயாராகி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சி ஒத்திகை நடத்தப்படுகிறது. தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஒத்திகையை நேரில் ஆய்வு செய்தார். சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் லட்சக்கணக்கான பேர் ஒமிக்ரானின் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 300க்கும் குறைவாக உள்ள நிலையில், புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாக கண்டறியப்படவில்லை. இந்தியாவில் தற்போது கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என நிபுணர்கள் கருத்து கூறிவந்தாலும், மத்திய சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

’இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள்’ - வீர பாலகர் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேதனை

புதுடெல்லி: இந்தியாவின் வீர வரலாறு தன்னம்பிக் கையை வளர்க்கும். ஆனால் இந்திய வரலாறு என்ற பெயரில் பொய் கதைகள் கற்பிக்கப்படுகின்றன என்று பிரதமர்நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த 1666-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங் பிறந்தார். அவரது தலைமையிலான சீக்கிய படைகளுக்கும் முகலாய மன்னர் அவுரங்கசீப் படைகளுக்கும், இடையே பல்வேறு போர்கள் நடைபெற்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழுமலையானுக்கு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வீடு: நன்கொடை வழங்கிய தமிழக பெண் பக்தர்

திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் அசையா சொத்துகள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையானுக்கு சொந்தமாக வீடுகள், வீட்டு மனைகள், நிலங்கள் உள்ளன. நாடு முழுவதும் ஏழுமலையானுக்கு 930 இடங்களில் அசையா சொத்துகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்திலும் சுவாமிக்கு சொத்துகள் உள்ளன. இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும். இது தவிர, தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என நவரத்தினங்களால் ஆன நகைகள், கிரீடங்கள் என பல கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும் உள்ளன. இதில் 9,259 கிலோ தங்கம், தங்க பிஸ்கெட்டுகளாக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு வட்டியாக திருப்பதி தேவஸ்தானம் தங்கத்தையே பெற்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி விமான நிலையத்துக்கு வந்த வெளிநாட்டு பயணிகளில் 0.5% பேருக்கு கரோனா

புதுடெல்லி : சீனாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. கடந்த 2 நாட்களில் டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்துக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 0.5 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜெனஸ்டிரிங்ஸ் டயகனாஸ்டிக் மையம் தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயர் சூட்டியது பாஜக

அவுரங்காபாத் : மகாராஷ்டிரா மாநிலம் அவுரங் காபாத் பாஜக தலைவர் ஷிரிஷ் போரல்கர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை போற்றும் விதமாக பூமியிலிருந்து 392.01 ஓளிஆண்டு தூரத்தில் ஒரு நட்சத்திரத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நட்சத்திரமானது சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்துக்கு வாஜ்பாய் பெயரைச் சூட்டுவதற்காக சர்வதேச விண்வெளி அமைப்பில் பதிவு செய்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''ராகுல் காந்தி ஒரு சூப்பர் ஹியூமன்'' - காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. தலைவர் ராகுல் காந்தி நேற்று (டிச.26) காலை மகாத்மா காந்தி நினைவிடம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நேற்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் அவர் இந்த நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி அவர் வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக ராகுல் காந்தி தலைவர்களில் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அது நேற்றுமுன்தினம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படாததால் நேற்று காலை ராகுல் காந்தி தலைவர்கள் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிசிடிவி சர்ச்சைக்குப் பிறகு ஆம் ஆத்மி அமைச்சருக்கான வசதிகள் குறைப்பு

புதுடெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சிறப்பு வசதிகள் விதிகளை மீறி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே அவருக்கு ஒருவர் மசாஜ் செய்வது, சிறை அறையில் அவர் பலரை சந்தித்து பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெரும்பாலானோருக்கு எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளதால் பி.எப்.7 வைரஸால் அதிக பாதிப்பு இருக்காது: மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (சிசிஎம்பி) ஒன்றாகும். இந்த ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - சிம்மம் ராசியினருக்கு எப்படி?

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புத்தாண்டு ராசிபலன்கள் 2023 - கடகம் ராசியினருக்கு எப்படி?

கடகம் ( புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது. கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எங்களுக்கு மணப்பெண்கள் எங்கே? - திருமணமாகாத ஆண்கள் மகாராஷ்டிராவில் பேரணி

மும்பை : கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிய உதவும் சோதனைக்கு தடை இருந்தும் அதை கடுமையாக பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தியாவில் ஆண் - பெண் விகித்தாச்சாரம் குறைந்தால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. பல மாநிலங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 800 பெண்கள் என்றும் சில மாநிலங்களில் அதற்கும் குறைந்த நிலையிலும் உள்ளது. இதனால் திருமணத்துக்கு பெண்கள் இல்லாத சூழ்நிலையில், ஆண்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி பல்கலை.யில் சிறுத்தை நடமாட்டம் - வீடு திரும்பிய விடுதி மாணவர்கள்

திருப்பதி : திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட மாணவர்கள், விடுதிகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். திருப்பதியில் அலிபிரி மலையடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்