Skip to main content

Posts

Showing posts from May, 2023

தோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, அரசியல் களத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசன் தான் தோனியின் கடைசி சீசன் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும் ரசிகர்களுக்காக வேண்டி இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தோனி தெரிவித்தார். இந்தச் சூழலில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இதனை தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கார் தீப்பிடித்ததில் புதுமணத் தம்பதி உட்பட 4 பேர் உயிரிழப்பு

போபால் : மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் நேற்று திருமண நிகழ்வுக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கார் வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் புதுமணத் தம்பதியும் அடங்குவர். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்து தேசிய உணர்வுகளை காங்கிரஸ் அவமதித்தது' - ராஜஸ்தானில் பிரதமர் மோடி சாடல்

அஜ்மீர் : ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலையொட்டி பாரதீய ஜனதா கட்சியின் ஒரு மாத கால பான்-இந்தியா பிரச்சாரமான 'மஹா ஜன்சம்பர்க்'-ஐ பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தொடங்கிவைத்தார். இதில் பேசிய பிரதமர் மோடி, "ஒன்பது ஆண்டுகால பாஜக அரசு நாட்டு மக்களுக்கு சேவை, நல்லாட்சி, ஏழைகளின் நலன் ஆகியவற்றிற்காக அர்ப்பணித்துள்ளது. 2014க்கு முன், நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. காங்கிரஸ் அரசு எல்லையில் சாலைகள் அமைக்க பயந்தது. எனினும், 2014ல் உங்களின் ஒரு வாக்கு மூலம் அனைத்தையும் மாற்றிவிட்டீர்கள். இப்போது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘தைரியமிருந்தால் சீனா மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துங்கள்’- பாஜகவுக்கு ஒவைசி சவால்

சங்காரெட்டி (தெலங்கானா): " உங்களுக்கு தைரியமிருந்தால் சீனாவின் மீது ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்துங்கள்" என்று பாஜகவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாவல் விடுத்துள்ளார். தெலங்கானாவின் பழைய நகரம் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம் என்று தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை தெரிவித்ததற்கு பதிலடியாக அசாதுதீன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஹைதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சை, "பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ரோகிங்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாக்களர்களின் உதவியுடன் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள். ஹைதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரோகிங்யா வாக்களர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், நாம் அந்தப் பழைய நகரின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்" என்று தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Ta...

“மக்களை அச்சுறுத்துகிறது பாஜக” - அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சான் ஃபிரான்சிஸ்கோ: இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரின், சான்டா க்ளாராவில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது, "பாஜக அரசு அனைத்து மக்களையும் அச்சுறுத்துகிறது. அரசு நிறுவனங்களைத் தவறான வழியில் பயன்படுத்துகிறது. மக்களைத் தொடர்பு கொள்ளக்கூடிய அரசின் அனைத்து அமைப்புகளையும் பாஜகவும் ஆர்எஸ்எஸும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அதானால்தான் இந்திய ஒற்றுமை யாத்திரை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் - பிரிஜ் பூஷன் சிங் கருத்து

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்து, பின்னர் அதனை கைவிட்டது குறித்து பிரிஜ் பூஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ்போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் போாரட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற இவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹாரை சேர்ந்தவர்கள் புனித யாத்திரை சென்றபோது காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து 10 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஸ் பள்ளத்தில் விழுந்து உருண்டதில் பிஹாரைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜம்மு-நகர் தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தசரஸிலிருந்து கத்ரா நோக்கி நேற்று காலை ஒரு பஸ் சென்றது. ஜஜ்ஜார் கோட்லி அருகே உள்ள பாலத்தில் பஸ் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். சாதுர்யமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் சேரும். ரிஷபம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணவரவு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி

சான் பிரான்சிஸ்கோ : 10 நாட்கள் சுற்றுப்பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அம்மாநில முதல் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலும், வரவிருக்கும் தேர்தலை இருவர் தலைமையிலும் காங்கிரஸ் சந்திப்பது என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“மணிப்பூர் நிலைமை சீராக சிறிது காலமாகும்” - முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தகவல்

புனே: மணிப்பூரில் எதிர்கொள்ளக் கூடிய சவால்கள் இன்னும் சரியாகிவிடவில்லை என்றும், அங்கு நிலைமை சீராக சில காலம் ஆகலாம் என்றும் முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தற்போதுள்ள சூழல் வன்முறையுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்று செல்லும் 144-வது பேட்ஜ்ஜின் அணிவகுப்பினை மதிப்பாய்வு செய்வதற்காக முப்படைத் தளபதி புனே சென்றிருந்தார். அப்போது மணிப்பூர் நிவலரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அனில் சவுகான், "கடந்த 2020-ம் ஆண்டுக்கு முன்பே மணிப்பூரில் ராணுவம், அசாம் ரைஃபில் படை நிலைநிறுத்தப்பட்டன. வடக்கு எல்லைகளில் சவால்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் ராணுவத்தினை நாம் திருப்ப அழைத்தோம். அங்கு வன்முறைச் சம்பவங்கள் குறையைத் தொடங்கியதைத் தொடர்ந்து அதனை நாம் செய்ய முடிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது: கர்நாடகா முதல்வர்

பெங்களூரு: பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளின் மனதை மாசுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த எழுத்தாளர்களுடனான சந்திப்பில் சித்தராமையா இதனைத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் பலி; காயம் 20

ஸ்ரீநகர்: ஜம்முவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான பேருந்து கட்ரா நோக்கி சென்று கொண்டிருந்தது. ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில், "மாதா வைஷ்ணோதேவி கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜஜ்ஜார் கோட்லி அருகே விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக 9 ஆண்டு ஆட்சியில் பணவீக்கம் - கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது. கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் காஸ், பெட்ரோல்-டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

30-05-2023 சோபகிருது 16 வைகாசி செவ்வாய்க்கிழமை திதி: தசமி பிற்பகல் 1.23 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: அஸ்தம் இன்று முழுவதும். நாமயோகம்: சித்தி இரவு 9.08 வரை. பிறகு வய்தீபாதம். நாமகரணம்: கரசை பிற்பகல் 1.23 வரை. பிறகு வணிசை. நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00. யோகம்: சித்தயோகம் சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.31. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,6,8 சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புது வேலை அமையும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் செல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்வர் தகவல்

இம்பால்: மணிப்பூரில் கடந்த 4 நாட்களில் 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில முதல்வர் பைரன் சிங் கூறியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மேதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குக்கி உள்ளிட்ட பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபட்டனர் இதில் 70 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.மணிப்பூரில் 3 வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறையும் பதற்றமும் நீடித்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோல் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் மோடி செயல்பட வேண்டும்: வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி கருத்து

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை நிறுவுவதற்காக தமிழகத்தின் சைவ ஆதீனங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் முக்கியமானவரான 18-வது குருசபையில் திருக்கயிலாயப் பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் சக்திஞான மகாதேவ தேசிக பரமாச்சாரி சுவாமி, செங்கோலின் குறியீட்டிற்கு ஏற்றவாறு பிரதமர் நரேந்திர மோடி செயல்பட வேண்டும் என்பதே தங்கள் அவா என, ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்திற்கு பின் மீண்டும் நீங்கள் அனைவரும் டெல்லியில் மத்திய அரசால் கவுரவிக்கப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவையில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது

சீனா தன்னை ‘‘சீன மக்கள் குடியரசு’’ என அழைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர முடியும். எனவே சீனா ஜனநாயக நாடாக முடியாது. பரம்பரையாக வரும் ராஜா அல்லது ராணியை தலைமையாக கொண்டிருக்கும் ஒரு நாடு குடியரசாக முடியாது. இங்கிலாந்து ஜனநாயக நாடாக திகழ்ந்த போதிலும், மன்னர் ஆட்சி நடைபெறுவதால் அந்த நாடு குடியரசாக முடியாது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

29-05-2023 சோபகிருது 15 வைகாசி திங்கள்கிழமை திதி: நவமி நண்பகல் 12.04 மணி வரை, பிறகு தசமி. நட்சத்திரம்: உத்திரம் பின்னிரவு 4.43 வரை, பிறகு அஸ்தம். நாமயோகம்: வஜ்ரம் இரவு 9.15 வரை, பிறகு சித்தி. நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.04 வரை, பிறகு தைதுலம். நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.0 0. யோகம்: சித்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7, 5 சந்திராஷ்டமம் அவிட்டம், சதயம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை திறந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தமிழ் வேத மந்திரங்கள் முழங்க, சர்வமத பிரார்த்தனையுடன் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு, தமிழக ஆதீனத் தலைவர்கள் வழங்கிய செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே அவர் நிறுவினார். டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி நேற்று காலை 7.30 மணி அளவில் புதிய நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தொழில், வியாபாரத்தில் முக்கிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவு செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல சேதி வரும். ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். குடும்பத்தினருடன் சென்று பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்பட்டது செங்கோல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு வலப்புறத்தில் செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் இன்று திறப்பு விழா காண உள்ளது. இதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிறுவும் வைபவம் இன்று நிகழ்ந்தேறியது. செங்கோல் நிறுவப்படுவதற்கு முன்பாக அதற்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டன. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்களும் தேவாரமும் ஓத செங்கோலுக்கு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், செங்கோலுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உறவினர், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு திருமணம் கூடி வரும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியுண்டு. பணவரவு திருப்தி அளிக்கும். ரிஷபம்: உறவினர் மத்தியில், மரியாதை கூடும். அடிமனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்றத்தில் செங்கோல் | விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்: தமிழிசை சவுந்தரராஜன்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்ட விழாவை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்று பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய நாடாளுமன்றம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், முன்னதாக நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் வலப்புறத்தில் புனித செங்கோல் நிறுவப்பட்டது. சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், "நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர்

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன், 5 ஸ்டார் அந்தஸ்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை அதிநவீன வசதிகளுடன் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டி முடித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் கலாச்சாரத்தை சித்தரிக்கும் செங்கோல் - தமிழக ஆதீனங்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது நாட்டின் கலாச்சாரத்தை சித்தரிப்பதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். நாடு சுதந்திரம் அடைந்த போது, தமிழக ஆதீனத்தால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலை தான் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவ முடிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்த போது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கு அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை எட்ட மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மோடி இக்கூட்டத்தில் வலியுறுத்தினார். மத்திய அரசின் சிந்தனை அமைப்பான ‘நிதி ஆயோக்’ அமைப்பின் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், யோகி ஆதித்யநாத் (உ.பி.), புஷ்கர் சிங் தாமி (உத்தராகண்ட்), சிவராஜ் சிங் சவுகான் (ம.பி.) மனோகர் லால் கட்டார் (ஹரியாணா) உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்: சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தகவல்

புதுடெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஏபிபி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார். இன்னொரு புறம், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு - ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை : தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, மேம்பாட்டுத் திட்டங்களிலும் ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும், பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் ஜப்பானின் ஒசாகா நகருக்குச் சென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சி - பிரதமர் மோடியிடம் 9 கேள்விக்கு பதில் கோருகிறது காங்கிரஸ்

புதுடெல்லி : பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தாங்கள் கேட்கும் 9 கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று மே 30-ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பிரதமரிடம் 9 கேள்விகளை கேட்க காங்கிரஸ் விரும்புகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

27-05-2023 சோபகிருது 13 வைகாசி சனிக்கிழமை திதி: சப்தமி காலை 7.58 வரை. பிறகு அஷ்டமி. நட்சத்திரம்: மகம் இரவு 11.58 வரை. பிறகு பூரம். நாமயோகம்: வ்யாகாதம் இரவு 8.11 வரை. பிறகு ஹர்ஷணம். நாமகரணம்: வணிசை காலை 7.58 வரை. பிறகு பத்திரை. நல்ல நேரம்: காலை 7-8, 10.30-1, மாலை 5-8, இரவு 9-10. யோகம்: அமிர்தயோகம் இரவு 11.58 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை. பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41. அஸ்தமனம்: மாலை 6.29. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3,5,9 சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி : டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவை புறக்கணிக்க 19 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பெயர், ரோல் நம்பர், ரேங்க்கை இருவர் எடுத்ததாக சர்ச்சை - யார் சரியான நபர்?

இந்தூர்: அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவை வெளியிட்டது. இந்த தேர்வை எதிர்கொண்ட தேர்வர்கள் அதற்கான முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தினர். அதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தேர்வர்களும் அடங்குவர். ஒரே முதல் பெயர், ஒரே ரோல் நம்பர் மற்றும் ஒரே ரேங்கை அவர்கள் இருவரும் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவரத்தை அவர்கள் இருவரும் அறிந்து கொண்டபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் ஒருவர் மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான ஆயிஷா பாத்திமா. மற்றொருவர் அதே மாநிலத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ஆயிஷா மக்ரானி. இருவரும் 184-வது இடத்தை பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் தான் அசலான தேர்வர் என்பதை நிரூபிக்க காவல் துறையில் புகார் தெரிவித்தனர். இதனை யுபிஎஸ்சி கவனத்திற்கும் கொண்டு சென்றனர். நீதி வேண்டும் என சொல்லி ஆயிஷா மக்ரானி இதை செய்திருந்தார். சுமார் இரண்டு ஆண்டு காலம் இதற்காக மிகக் கடுமையாக அவர் பயின்றுள்ளார். மறுபக்கம் எதிர்காலத்தில் இது போன்ற குழப்பம் நடைபெற கூடாது எனவும், ...

எல்ஐசி நிகர லாபம் 566% உயர்வு

புதுடெல்லி: எல்ஐசி 2022-23 நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காம் காலாண்டில் ரூ13,428 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது 2021-22 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 566 சதவீதம் அதிகம் ஆகும். அக்காலாண்டில் எல்ஐசி ரூ.2,371 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதேசமயம், எல்ஐசியின் மொத்த வருவாய் கடந்த நான்காம் காலாண்டில் ரூ.2 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் அதன் மொத்த வருவாய் ரூ.2.15 லட்சம் கோடியாக இருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதுடெல்லி: உலகின் பழமையான மொழி தமிழ், ஒவ்வொரு இந்தியரின் மொழி தமிழ் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஜப்பான், பப்புவா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாலை 3 மணிக்கு டெல்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் பாஜகவினர் உட்பட ஏராளமானோர் திரண்டு வந்து பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கியிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்' அதாவது ‘மக்கள் தொகைக்கேற்ப உரிமைகள்’ என்பதே அந்த கொள்கை முழக்கம். இந்தியாவில் சுமார் 70% இந்தியர்கள் (ஓபிசி/எஸ்சி/எஸ்டி) ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் தோராயமாக 70% ஆக இருக்க வேண்டும். இந்த கொள்கையையே ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங் கும் அமைப்பு உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி எளிதில் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி திஹார் சிறையில் மயங்கி விழுந்த சத்யேந்திர ஜெயின்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவர்களில் ஒருவருமான சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக் கைதியாக டெல்லி திஹார் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிறையில் உள்ள குளியல் அறையில் தலைச்சுற்றல் காரணமாக அவர் நேற்று மயங்கி விழுந்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.இதுகுறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சத்யேந்திர ஜெயின் முதலில் தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு சுவாச பிரச்சினை காரணமாக லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கோல் வரலாற்றை நினைவுகூர்ந்த ‘மகா பெரியவர்’

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சி கைமாறியதில் செங்கோல் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானது. ஆனால், அது வரலாற்றில் முக்கிய அம்சமாக இடம் பெறவில்லை. கடந்த 1978-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில், இந்த செங்கோல் கதையை எடுத்துக் கூறினார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் ‘மகா பெரியவர்’ என அழைக்கப்பட்டார். இந்த கருத்து இவர் கடந்த 1994-ம் ஆண்டு முக்தி அடைந்தபின் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில் இடம் பெற்றது. அதன் பின்பு இது பற்றிய செய்திகளும், படங்களும் ஊடகங்களில் அதிகம் வெளியாயின. இது குறித்த கட்டுரை துக்ளக் இதழில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. இந்த கட்டுரையை பிரபல நடன கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினார். வரலாற்றில் மறைக்கப்பட்டு, மக்களுக்கு தெரிவிக்கப்படாத இந்த செங்கோல் வழங்கப்பட்ட புனிதமான வரலாற்று நிகழ்வை 2021-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஊடகங்களில் வெளியான செய்தியை...

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டும் பாஜக - மத்திய அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அஜ்மீர் வருகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டுகிறது. தனது அரசின் 9-ம் ஆண்டு நிறைவில் அங்குள்ள அஜ்மீருக்கு மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் வகையில் வரும் மே 31-ல் பிரதமர் நரேந்திர மோடி அஜ்மீர் வருகிறார். அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு மூன்றாவது முறையாக வருகிறார். இக்கூட்டம் பிரதமர் மோடி அரசின் 9-ம் ஆண்டு நிறைவு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கதேசத்திடம் 20 ரயில் இன்ஜின்கள் ஒப்படைப்பு

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு அக்டோ பரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, அவரிடம் 20 அகலப்பாதை (பிஜி) ரயில் இன்ஜின்களை தயாரித்து அளிப்பதாக இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றும் விதமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 20 இன்ஜின்கள் வங்கதேசத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன. இந்த இன்ஜின்களை பயணிகள் மற்றும் சரக்கு ஆகிய இரண்டு ரயில் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்த பெருந்தொற்று கரோனாவை விட மிகவும் மோசமானதாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை

புதுடெல்லி: அடுத்த பெருந்தொற்று கரோனா வைரஸை விட மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 22-ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் ஆதானோம் கேப்ரியேசஸ் பேசியதாவது: கரோனா வைரஸின் சர்வதேச சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், இதன் மூலம் கரோனா வைரஸின் சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. மேலும் ஒரு பெருந்தொற்று உருவாகி வருகிறது. இந்த பெருந்தொற்றானது மிகவும் மோசமான அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவி மனம் விட்டு பேசுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கியது | புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி : சுதந்திரத்தின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களில் காஷ்மீர் இடம்பெறும்: ஜி20 கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நம்பிக்கை

ஸ்ரீநகர்: சர்வதேச சுற்றுலாத்தலங்கள் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் ஜம்மு-காஷ்மீர் இடம்பிடிக்கும் என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான ஜி-20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நிர்வாக வசதிக்காகவே ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில்

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ரூ.2,000 திரும்பப் பெறுதல் தொடர்பான ரிசர்வ் வங்கியின் அறிவிக்கை மற்றும் எஸ்பிஐயின் ஆதாரம் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஊழலை ஒழிக்க இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிரானவை" என்று கூறப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பிறகு 1 கி.மீ. பின்னோக்கி வந்த ரயில்: கேரளாவில் வினோத சம்பவம்

கொச்சி: ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுவிட்டு பிறகு அதே ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல ரயில் ரிவர்ஸில் வந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிம், திருவனந்தபுரம் – ஷோரனூர் இடையே வேநாடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் ஷோரனூர் நோக்கிச் செல்லும்போது, ஆலப்புழா மாவட்டம், செரியநாடு என்ற ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பு உள்ளது. பணவரவு உண்டு. ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாப் | கிரிக்கெட் வீரருக்கு அரசு வேலை வழங்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டார் முன்னாள் முதல்வரின் உறவினர்

சங்குரூர் : கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினர் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் என முதல்வர் பகவந்த் மான் குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தின் திர்பா மற்றும் சீமா ஆகிய பகுதிகளில் அரசு அலுவலக வளாகங்கள் கட்டுவதற்கு முதல்வர் பகவந்த்மான் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் தரம்சாலா சென்றிருந்தபோது, பஞ்சாப் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரரை சந்தித்தேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்