Skip to main content

Posts

Showing posts from July, 2023

மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் எஸ்ஐடி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவு

புதுடெல்லி: மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 குகி பழங்குடியினப் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதமாக நடைபெறும் வன்முறையில் இதுவரை 182-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணவரவு திருப்தி தரும். ரிஷபம்: பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பை ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆர்பிஎஃப் காவலர் தாக்குதல் - எஸ்.ஐ. உட்பட 4 பேர் சுட்டுக் கொலை

மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎஃப்) சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தனது உயரதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ப முயன்ற காவலரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை (மேற்கு ரயில்வே) ஐ.ஜி. பிரவீன் சின்ஹா கூறியதாவது. ஜெய்ப்பூர் - மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பை ரயில் நிலையத்தை அடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக, நேற்று (ஜூலை 31) அதிகாலை 5 மணி அளவில் வைதர்னா ரயில் நிலையத்தை கடந்தபோது, பால்கருக்கு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6 கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் சொல்லுங்கள் - மணிப்பூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி

புதுடெல்லி: மணிப்பூரைப் போல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது எனக் கூறுவது ஏற்புடைய வாதமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை விசாரணை செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி சந்தேகம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நேற்று கூறியது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் மீதான விவாதத்தை திட்டமிடுவதற்கான 10 நாள் அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயன்படுத்த முடியாது. அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்துக்குரியவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜீவ் காந்தி இறப்புக்குப் பின் எப்படி சமாளித்தீர்கள்? - சோனியா காந்தியிடம் ஹரியாணா பெண் விவசாயி கேள்வி

புதுடெல்லி: ராஜீவ் காந்தி இறப்புக்குப்பின் நிலைமையை எப்படி சமாளித்தீர்கள் என ஹரியாணா பெண் விவசாயி ஒருவர் சோனியா காந்தியிடம் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது ஹரியாணா மாநில பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது தலைநகர் டெல்லியை பார்க்க வேண்டும் என்ற அந்த பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்ற அவர்களுக்கு தங்கள் வீட்டில் விருந்தளித்தார் ராகுல். அப்போது, ராகுல்,சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் ஹரியாணா பெண் விவசாயிகளிடம் கலந்துரையாடினர். இந்த வீடியோ காட்சியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே பகிர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

31-07-2023 சோபகிருது 15 ஆடி திங்கள்கிழமை திதி: திரயோதசி காலை 7.29 மணி வரை, பிறகு சதுர்த்தசி மறுநாள் பின்னிரவு 3.54 வரை, பிறகு பவுர்ணமி. நட்சத்திரம்: பூராடம் இரவு 7 மணி வரை, பிறகு உத்திராடம். நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 11.07 வரை, பிறகு ப்ரீதி. நாமகரணம்: தைதுலம் காலை 7.29 வரை, பிறகு கரசை. நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00. யோகம்: மந்தயோகம் சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை பரிகாரம்: தயிர் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.36 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 4, 2, 9 சந்திராஷ்டமம் மிருகசீரிஷம், திருவாதிரை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பல வகையிலும் பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர்கள். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். ரிஷபம்: செலவு கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்தாலும், கைமாற்று வாங்கி சமாளிப்பீர்கள். எக்காரியத்திலும் நிதானம் தேவை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்: மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு

இம்பால்: மணிப்பூர் கலவரம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பிரதமர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, மணிப்பூருக்கு நேரில் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். இதையடுத்து, கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வீடுதோறும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்’ இயக்கத்தில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி ‘என் மண், என் தேசம்' இயக்கம் தொடங்கப்படும். இதன்படி, அவரவர் பகுதியில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தி செல்ஃபி புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று ஒலிபரப்பான 103-வது ‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி | மருத்துவ கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீட்டு ஒப்புதலில் கூடுதல் விவரம் கேட்கும் மத்திய அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் மருத்துவ சென்டாக் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் அரசு பள்ளியில் படித்தோருக்கு உள்ஒதுக்கீடு தர ஒப்புதல் தர கூடுதல் விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளதால் அதற்கான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் புதுச்சேரி அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 24ம் தேதி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., (ஆயுர் வேதம்) உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தக்காளி விலை ஏற்றத்தால் ஆந்திராவில் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்த விவசாயி

கோலார் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக் குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது. தக்காளி விவசாயத்தில் அதிக லாபம் அடைந்தது குறித்து முரளி கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். கடந்தாண்டு ஜூலை மாதத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் எனக்கு ரூ.1.5 கோடி கடன் ஏற்பட்டது. அடிக்கடி மின்தடையால் விளைச்சலும் சரியாக இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாய்மொழி கல்வியால் நீதி கிடைத்திருக்கிறது - அகில இந்திய கல்வி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி : தாய் மொழிக் கல்வியால் மாணவ, மாணவியருக்கு நீதி கிடைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதிய தேசிய கல்வி கொள்கைக்கு கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் 3-ம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நேற்று அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் வீடியோ விவகார வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிஐ

புதுடெல்லி : மணிப்பூரில் இரு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி சமுதாயத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இரு பிரிவினரிடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது பின்னர் வன்முறையாக மாறியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வரும் ராகுல் காந்தி நாளை டிஸ்சார்ஜ்

மலப்புரம் : காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு முழங்கால் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவில் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கடந்த 21-ம் தேதி ராகுல் காந்தி சிகிச்சைக்காக சேர்ந்தார். மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலரும் தலைமை மருத்துவருமான பி.எம்.வாரியர் அவரை வரவேற்றார். மருத்துவமனையில் ராகுல் காந்தி ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானாவில் கன மழையால் 14 பேர் உயிரிழப்பு: ஹைதராபாத் - விஜயவாடா இடையே போக்குவரத்து பாதிப்பு

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்து வரும் கன மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் இதுவரை 14 பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. கன மழையால் சுமார் 2 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த குடிசைகளில் வசித்த மக்கள் வீடு, உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். சுமார் 5.5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, காய்கறி, பருத்தி ஆகிய பயிர்கள் நாசமாகி உள்ளனர். சுமார் 135 ஏரிகள் உடைந்து, பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

சென்னை : உலகில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டுவர பணியாற்றுமாறு ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் கூட்டம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிஆர்பிஎப் நிறுவன தினம் பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி : சிஆர்பிஎப் நிறுவன தினத்தையொட்டி அந்த படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1939-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி சிஆர்பிஎப் படை உருவாக்கப்பட்டது. இந்த படை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சுமார் 3.13 லட்சம் வீரர்கள் படையில் பணியாற்றி வருகின்றனர். கலவர தடுப்பு, தீவிரவாத தடுப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணியில் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சலும், செலவுகளும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப் போய் சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள். உடல் நலத்திலும் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை

மலப்புரம் : கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டக்கல் வைத்திய சாலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியது: ராகுல் காந்தி உடல் ஆரோக்கிய பராமரிப்புக்காக கோட்டக்கல் ஆர்ய வைத்ய சாலையில் சிகிச்சை எடுத்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரைப்பட திருட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை | ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி: திரைப்பட திருட்டுக்கு (சினிமா பைரஸி) கடுமையான தண்டனைகள் மற்றும் திரைப்படங்களை வகைப்படுத்த புதிய வயது வகைகளை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் கொண்ட ஒளிப்பதிவு (திருத்தம்) மசோதா 2023 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் இந்த மசோதாவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தின் நோக்கம், திரைத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் திருட்டை (பைரஸி) தடுப்பதாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வாகனப் பழுது நீங்கும். மூத்த சகோதரர் பாசமாகப் பேசுவார். நீங்களும் சாதுர்யமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவதற்கு வழி பிறக்கும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் எதிர்பாராத சந்திப்புகள் நிகழும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுக்க அனுமதி - மக்களவை தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி : மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் முடங்கின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு: மத்திய அமைச்சர் அஷ்வின் தகவல்

புதுடெல்லி: கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தரவுகள் கசிந்த விவகாரத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. இதனை எம்.பி டி.ரவிகுமார் கேள்விக்கு மக்களவையில் அளித்த பதிலில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தகவல் அளித்துள்ளார். கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்கள், அவர்களின் தனிப்பட்ட முக்கியமான தகவல்கள் டெலிகிராம் எனும் சமூகவலைதளத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. இதன் மீதான விசாரணை குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.,யுமான டி.ரவிகுமார் மக்களவையில் கேள்வி எழுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் தரைவழி இணைய சேவைக்கு அனுமதி: செல்போன் இணைய சேவைக்கு தொடரும் தடை

இம்பால்: கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணையதள சேவைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் வசித்துவருகின்றனர். அதேபோல் நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுற்றுப்பாதை 5-வது முறையாக மாற்றம்: ஆக.1-ல் நிலவை நோக்கி பயணிக்கிறது சந்திரயான்-3

சென்னை: சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஆக.1-ம் தேதி நிலவை நோக்கி சந்திரயான் பயணிக்கிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றம் 4-வது நாளாக முடக்கம்: அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

புதுடெல்லி : மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 4-வது நாளாக நேற்றும் முடங்கியது. இந்நிலையில் பிரதமரை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பற்றி ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூரில் 2 பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், மழைக்கால கூட்டத்தொடர் முதல் நாளிலேயே முடங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி அரசுக்கு எதிரான அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. என்றாலும், இந்த மசோதாவை எப்போது தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். மகள், மகனின் கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: அரசால் அனுகூலம் உண்டு. இழுபறி வழக்கில் சாத கமான திருப்பம் வரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அகமதியா முஸ்லிம்கள் விவகாரம் | ஆந்திர வக்ஃபு வாரியத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு - மாநில அரசு தலையிட ஸ்மிருதி இரானி கடிதம்

புதுடெல்லி: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 19-ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இடையே ‘அகமதியா’ என்ற புதிய பிரிவு தோன்றியது. காதியானி என்றும் அழைக்கப்படும் இப்பிரிவினர் பிற முஸ்லிம்களை போல நபிகள் நாயகத்தை (ஸல்) கடைசி இறைத் தூதராகக் கருதுவதில்லை. மாறாக, தங்கள் பிரிவில் வாழ்ந்த அகமதியாவின் நிறுவனரான மிர்சா குலாம் அகமதுவை கடைசி இறைத் தூதராக ஏற்றுள்ளனர். முஸ்லிம்கள் தங்கள் இறைவனான அல்லாவை தவிர வேறு எவரையும் வழிபடுவதில்லை. ஆனால் அகமதியாக்கள், தாங்கள் கடைசி இறைத் தூதராகக் கருதும் மிர்சா குலாம் அகமதியாவையும் வழிபடுகின்றனர். இதுதவிர மேலும் பல காரணங்களால் உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள், அகமதியாக்களை தங்கள் சமூகத்தின் பிரிவாகக் கருதி தங்களுடன் சேர்ப்பதில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் விவகாரம் | நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்: பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் கோஷம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் வெளியே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டி பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆம் ஆத்மி உறுப்பினர் இடைநீக்கம்: நள்ளிரவை தாண்டியும் நீளும் எதிர்க்கட்சி எம்பிக்களின் தர்ணா

புதுடெல்லி : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டம் வருகின்றனர். நள்ளிரவை தாண்டியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான திங்கள்கிழமையும் மணிப்பூர் விவகாரத்தால் இரு அவைகளிலும் முடங்கின. முன்னதாக நேற்று அவைத் தலைவரின் உத்தரவுகளை தொடர்ந்து மீறியதற்காக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் இந்தக் கூட்டத்தொடர் முழுவதுக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிற்பகல் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும், அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அந்த நிலையிலும் அவையில் கேள்வி நேரம் தொடர்ந்தது. அப்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.பி. சஞ்சய் சிங் அவையின் மையத்துக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகாலயா முதல்வர் அலுவலகத்தை தாக்கிய கும்பல் - 5 பாதுகாவலர்கள் காயம்

துரா : மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் அலுவலகத்தை வன்முறை கும்பல் ஒன்று தாக்கியதில் பாதுகாப்பு படையினர் 5 பேர் காயமடைந்துள்ளனர். மேகாலயாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக கான்ராட் சங்மா உள்ளார். இதனிடையே, அம்மாநிலத்தில் உள்ள காரோ மலைப்பிரதேச பகுதியில் வசிக்கும் மக்கள் மாநிலத்தின் குளிர்கால தலைநகராக துராவை அறிவிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராணுவ அதிகாரி குறித்து 22 ஆண்டுக்கு முன் அவதூறு செய்தி: ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தெஹல்கா நிறுவனத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராணுவ அதிகாரிக்கு எதிராக 22 ஆண்டுகளுக்கு முன் அவதூறு செய்தி வெளியிட்ட வழக்கில் ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தெஹல்கா செய்தி நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தருண் தேஜ்பாலும், அனிருத்தா பஹலும் இணைந்து 1999-ல் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு ‘தெஹல்கா’ செய்தி தளத்தை ஆரம்பித்தனர். புலனாய்வு செய்திகளை தெஹல்கா வெளியிட்டு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளை சந்திப்பதால் மனம் அமைதியடையும். ரிஷபம்: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சுறுசுறுப்பாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்த தொழிலதிபர்

நாக்பூர்: நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்ட மோசடியில் ரூ.58 கோடியை இழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம், ‘ஆன்லைன் சூதாட்டம் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும்’ என்று, நவரத்தன் ஜெயின் என்பவர் ஆசை காட்டியுள்ளார். முதலில் தயங்கிய தொழிலதிபர், பிறகு நவரத்தன் கூறியபடி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சத்தீஸ்கரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் - பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது

ராய்ப்பூர்: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ரானு சாஹு. 2010-ம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று சத்தீஸ்கர் மாநில வேளாண்துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

23-07-2023 சோபகிருது 7 ஆடி ஞாயிற்றுக்கிழமை திதி: பஞ்சமி காலை 11.49 வரை. பிறகு சஷ்டி. நட்சத்திரம்: உத்திரம் இரவு 7.51 வரை. பிறகு அஸ்தம். நாமயோகம்: பரிகம் பிற்பகல் 2.20 வரை. பிறகு சிவம். நாமகரணம்: பாலவம் காலை 11.49 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00. யோகம்: அமிர்தயோகம் இரவு 7.51 வரை. பிறகு சித்தயோகம். சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: வெல்லம் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.51. அஸ்தமனம்: மாலை 6.38. நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 1,3,5 சந்திராஷ்டமம் சதயம், பூரட்டாதி from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்: ரோஜ்கர் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கி வைத்தார். இதன்படி நாடு முழுவதும் இதுவரை 4.33 லட்சம் பேருக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்ற அவைகள் 2-வது நாளாக முடங்கின

புதுடெல்லி : மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த்தைகள் நீக்கம், டெல்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் இரு அவைகளும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ம்தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தால் அமளிஏற்பட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்களை இசை, நடனம் உள்ளிட்டவற்றில் பயிற்சி பெறச் செய்வீர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். கடன்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தீரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூர் வீடியோ | "நாட்டைப் பாதுகாத்த என்னால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை" - கார்கில் போர் ராணுவ வீரர் வேதனை

காங்போக்பி : மணிப்பூரின் காங்போக்பியில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஒன்று புதன்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அந்த வீடியோவில் காணப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்திய ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட்டின் சுபேதாராக பணியாற்றியவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎல்ஐ திட்டத்தில் பலன்பெற 176 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தேர்வு - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி : பிஎல்ஐ என்றழைக்கப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில் 176 எம் எஸ்எம்இ நிறுவனங்கள் பலன்பெற உள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சரான ஸ்ரீசோம் பிரகாஷ் தகவல் அளித்தார். இதன் மீது நாடாளுமன்ற மாநிலங்களயில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதன்மீது தனது எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஸ்ரீ சோம் பிரகாஷ் குறிப்பிட்டதாவது: “சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில் 14 துறைகளுக்கு மத்திய அரசு பிஎல்ஐ திட்டத்தைக் கொண்டுவந்தது. இதற்கு ரூ.1.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை உறுதி செய்வோம்: பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: இலங்கைத் தமிழ் சமூகத்துக்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எண்ணூர் எரிவாயு குழாய் பணி துவக்கப்படாதது ஏன்?- மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: சென்னையின் எண்ணூரில் எரிவாயுக் குழாய் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கு காரணத்தால், அந்தப் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை என்று மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி கூறியுள்ளார். தேசிய எரிவாயு குழாய் தொகுப்பு பணியின் மீது வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி அளித்த பதில் பின்வருமாறு: “ஒரே இந்தியா ஒரே எரிவாயு தொகுப்பு” என்ற கொள்கை அடிப்படையில் தேசிய அளவிலான எரிவாயுக் குழாய் தொகுப்பு அமைத்திட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்காற்று வாரியம் மத்திய அரசினால் பணிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தப்படும் வீடியோவை அகற்ற சமூக வலைதளங்களுக்கு அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தி இட்டுச் செல்லும் வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகுந்த அதிருப்தியைத் தரக்கூடியதாக இருப்பதாலும், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதாலும் இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மணிப்பூரில் இருந்து வெளியாகி உள்ள இரண்டு பெண்களின் பாலியல் வன்கொடுமை குறித்த வீடியோ கொடூரமானது; கண்டிக்கத்தக்கது; மனிதாபிமானமற்றது. இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசினேன். இந்தச் சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார். from இந்து தம...

விசா இல்லாமல் உலகளவில் இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு செல்லலாம்

லண்டன் : உலகின் அதிகாரமிக்க பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை லண்டனை சேர்ந்த ஹென்லி அமைப்பு வெளியிட்டுள்ளது. எந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கொண்டு அதிக எண்ணிக்கையிலான வெளிநாடுகளுக்கு விசா இல்லாமல் மற்றும் சென்றடைந்தவுடன் விசா பெறலாம் என்பதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீக வீட்டுப் பிரச்சினைகள் முடிவுறும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி: கைதான 5 பேரிடம் துப்பாக்கி, வெடிமருந்து பறிமுதல்

பெங்களூரு : பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி செய்ததாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ள‌னர். கைதானவர்கள் பதுக்கி வைத்த துப்பாக்கி, வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 7 மாநிலங்களின் முதல்வர்கள், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்