Skip to main content

Posts

Showing posts from August, 2024

கேரளா, திரிபுராவுக்கு தலா ரூ.15 கோடி: சத்தீஸ்கர் அரசு நிதியுதவி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட திரிபுரா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி வழங்க முதல்வர் தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “திரிபுரா மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிரிழப்பு மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ சத்தீஸ்கர் அரசு தயாராக உள்ளது” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் 2 இடங்களில் 4-ம் தேதி ராகுல் பிரச்சாரம்

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 2 இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் வரும் 4-ம் தேதி தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பங்கேற்க வேண்டும் என்பது மக்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பம். அதனால் ராகுல் காந்தி காஷ்மீருக்கு 4-ம் தேதி வருகிறார். தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிட்டும். புது தெம்பு பிறக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. ரிஷபம்: தன்னம்பிக்கையுடன்பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும் உத்தியோகம் சிறக்கும் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவைக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அசாம் முதல்வர் வலியுறுத்தல்

புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச அகதிகள், தமிழ்நாட்டில் கோவையை குறிவைத்து அங்குள்ள ஜவுளித் தொழிற்சாலைகளில் வேலையில் சேர முயல்வதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இத்தகைய சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வாசர்மா கூறியதாவது: வங்கதேசத்தில் கலவரச் சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். கடந்த 27-ம் தேதி அசாம் எல்லை வழியாகநுழைய முயன்ற 3 வங்கதேச அகதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி மீண்டும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பியுள்ளனர். இதுவரையில் அசாம் வழியாக நுழைய முயன்ற 50 வங்கதேச அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் திரிபுராவிலும் அகதிகள் தடுக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாம் சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கான தொழுகை நேரம் ரத்து: ஹிமந்த பிஸ்வா சர்மா வரவேற்பு

குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் பல ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வெள்ளிக்கிழமை தொழுகை நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அசாம் சட்டப்பேரவை விதிகள் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அசாம் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது முதல், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் உறுப்பினர்கள் தொழுகைக்கு செல்வதற்காக பேரவை அமர்வு காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்படுவது வழக்கம். அவர்கள் தொழுகை முடித்து வந்தபிறகு மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் அவை தொடங்கும். மற்ற நாட்களில் இதுபோன்ற எந்தவித ஒத்திவைப்பும் இன்றி அவை நடக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“இந்திய ஆண்களிடம் ஏதோ பிரச்சினை உள்ளது” - மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்து சசி தரூர் கருத்து

கொச்சி: “தினமும் செய்தித்தாள்களை எடுத்தாலே அதில் ஏதாவது ஒரு பெண் தாக்கப்பட்டதாக செய்தி இடம்பெறுகிறது. அது ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஒரு குழந்தையாகவோ அல்லது நடுத்தர வயது பெண்ணாகவோ இருக்கின்றனர். இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை நாம் கண்டறிய வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “பெண்கள் மீதான வன்முறை தொடங்கி பல விஷயங்கள் இப்போது சமூகத்தில் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. இவை காலம்காலமாக நடந்துகொண்டிருந்தாலும் 2012ல் நிர்பயா துயரத்துக்கு பிறகு தான் அதிகம் பேசப்படுகின்றன. இப்போது 2024ஆம் ஆண்டிலும் கூட கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு இப்படி ஒரு துயரம் நடந்திருக்கிறது. 12 ஆண்டுகள் கழித்தும் கூட எதுவுமே மாறியதாக தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: செலவுகளை குறைத்து இனி சேமிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வீண் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். ரிஷபம்: வெளிவட்டாரத்தில் புது நண்பர்கள் அறிமுகமாவர். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா போராட்டத்தில் போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரின் வேகத்தை தாங்கி நின்ற முதியவர்

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றனர். ஹவுரா பாலத்தில் மாணவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார்அவர்களை கலைக்க அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அப்போது மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காவி உடை அணிந்த முதியவர் ஒருவர் தேசியக்கொடியை அசைத்தவாறு அந்த இடத்தை விட்டு சற்றும் அகலாமல் நின்றிருந்தார். போலீஸார் பீய்ச்சியடித்த தண்ணீரை அவர் தனி ஆளாக நின்று எதிர்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குஜராத் கனமழை: வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு - முகாம்களில் 17,800 பேர் தங்கவைப்பு

காந்திநகர்: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்தில் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வருக்கு அவர் அறிவுறுத்தினார். குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஜாம்நகர், துவாரகா, அகமதாபாத், சூரத் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கத்தில் முழு அடைப்பால் இயல்புநிலை பாதிப்பு: பாஜக நிர்வாகியின் கார் மீது துப்பாக்கிச்சூடு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக அழைப்பு விடுத்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரயில், பேருந்து போக்குவரத்து முடங்கியது. பாஜக மூத்த தலைவர் பிரியங்கு பாண்டேவின் கார் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில், அவரது கார் ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு மாணவர்கள் நேற்றுமுன்தினம் தலைமைச் செயலகம்நோக்கி பேரணி சென்றனர். மாணவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் ரூ.28,600 கோடியில் 12 தொழில் நகரங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.28,600 கோடி முதலீட்டில் 12 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகத்தில் 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 234 நகரங்களில் தனியார் எஃப்.எம். வானொலி சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் தொழில் நகரங்கள், புதிய ரயில்வே திட்டங்கள், எஃப்.எம். வானொலி சேவை விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் வன்முறை

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. போலீஸ் தாக்குதலை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் கவிதா: ‘ஜெய் தெலங்கானா’ என முழக்கம்!

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறையிலிருந்து வெளியே வந்த அவரை பாரத் ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். வெளியே வரும்போது அவர் தனது கையை உயர்த்தி ‘ஜெய் தெலங்கானா’ என முழக்கமிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘யுபிஎஸ்’ ஓய்வூதியம் ஏற்பு: முதல் மாநிலமாக மகாராஷ்டிரா அறிவிப்பு

புதுடெல்லி : ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, பணவீக்கத்தை சரி செய்தல் மற்றும் பிற சலுகைகளுடன், கடைசி 12 மாத சராசரி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு குறையாமல் மத்திய அரசில் பணிபுரிந்தோருக்கு இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை முற்றிலும் சேதம் @ மகாராஷ்டிரா

மகராஷ்டிரா: மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி , கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, கடற்படை தினத்தை ஒட்டி மகராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இருப்பினும் சிலை இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது: பாலியல் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

ஜல்கான்: மகாராஷ்டிராவில் நடைபெற்ற ‘லட்சாதிபதி சகோதரிகள்’ நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.2,500 கோடி சுழல் நிதி மற்றும் ரூ.5,000 கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். ‘‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அவர் உறுதிபட தெரிவித்தார். கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 90.86 லட்சம் சுயஉதவி குழுக்கள் செயல்படுகின்றன. இதில் 10.05 கோடி பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் ‘லட்சாதிபதி சகோதரிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

குமுளி: தொடர் விடுமுறை காரணமாக தேக்கடிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லையில் கேரளத்தின் குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, மலையேற்றம், யானை சவாரி உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக படகு சவாரி மேற்கொள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் தேக்கடி வருகின்றனர். தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45, பிற்பகல் 3.30 மணிக்கு படகுகள் இயக்கப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட இழுபறியாகும். வீட்டில் குழப்பம் ஏற்படும். அமைதி காக்கவும். வியாபாரத்தில் சிக்கல் வரக் கூடும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டும். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது” - பிரதமர் மோடி

புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை செயல்படுத்த அவரது தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. “தேசத்தின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைக்கும் அரசு ஊழியர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது கண்ணியத்தையும், நிதி பாதுகாப்பையும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உறுதி செய்கிறது. அவர்களது நலன் சார்ந்தும், எதிர்காலம் சார்ந்தும் இந்த அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய உடை அணிய மத்திய அரசு அறிவுரை

புதுடெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பட்டமளிப்பு விழாக்களில் பாரம்பரிய உடைகளை அணிவது குறித்தும், காலனி ஆதிக்கத்தின் நினைவுகளை அழிப்பது தொடர்பாகவும் பிரதமர் மோடி 5 அறிவுரைகளை கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் மேன்மை உண்டு. ரிஷபம்: சவாலான காரியங்களையும் சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர். தடைகள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பீர். வியாபாரத்தில் போட்டி குறையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த இந்திய ராணுவத்தின் மினி ட்ரோன்

பூஞ்ச்: இந்திய ராணுவத்தின் மினி ட்ரோன் (யூஏவி) வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் விழுந்தது. அதனை இந்தியா வசம் திரும்ப தருமாறு பாகிஸ்தானுக்கு ஹாட்லைன் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று காலை 9.25 மணி அளவில் அந்த ட்ரோன் இந்திய எல்லையில் வழக்கமான பயிற்சி மிஷனில் இருந்துள்ளது. இந்திய எல்லைக்குள் இயக்கப்பட்ட அந்த ட்ரோன், தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவர். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்பு, மரியாதை உயரும். ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகம் சிறக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலையில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

புதுடெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் மருத்துவர்கள் வாபஸ் பெற மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஹரியாணாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” - முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கை

குருகிராம்: ஹரியாணா மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. “தேர்தல் தொடர்பாக நாங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். அதன் பின்னர் ஹரியாணா மக்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக உள்ளது. அந்த வகையில் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என நயாப் சிங் சைனி தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ரிஷபம்: நவீன மின் சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி கிட்டும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்தவர் உங்களை தேடி வருவார். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட்டில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் புதிய கட்சி தொடங்க திட்டம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்குள் அவமானத்தை சந்தித்ததால், தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் சம்பய் சோரன் அறிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நிதி மோசடி வழக்கில் கைதானதால், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார். சிறையில் இருந்து ஹேமந்த் சோரன் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்ததும், முதல்வர் பதவியை சம்பய் சோரன் ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்’ - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை

சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு பத்திரமாக திரும்புவார் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்தது. “சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப பல்வேறு ஆப்ஷன்கள் உள்ளன. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் மிஷன் அல்லது ரஷ்யாவின் Soyuz கேப்ஸ்யூல் போன்றவற்றை பயன்படுத்தி அவர் பூமிக்கு திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசவும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். ரிஷபம்: எதார்த்தமான பேச்சால் சுற்றியிருப்பவர்களை வசீகரிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெற யுபிஎஸ்சி-க்கு உத்தரவு

புதுடெல்லி: கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெறுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை அரசுத் துறைகளின் செயலர்கள், இணை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிப்பது வழக்கமாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 25 இடங்களில் காயம், கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி உயிரிழப்பு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. கையால் கழுத்தை நெரித்ததில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் உடலின் உள்ளே 9 இடங்கள், வெளியே 16 இடங்களில் காயம் இருந்ததாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

20.08.2024 குரோதி 4 ஆவணி செவ்வாய்க்கிழமை திதி: பிரதமை இரவு 8.33 வரை. பிறகு துவிதியை. நட்சத்திரம்: சதயம் பின்னிரவு 3.08 வரை. பிறகு பூரட்டாதி. நாமயோகம்: அதிகண்டம் இரவு 8.51 வரை. பிறகு சுகர்மம். நாமகரணம்: பாலவம் காலை 10.16 வரை. பிறகு கௌலவம். நல்ல நேரம்: காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00 யோகம்: மந்தயோகம் நாள் முழுவதும். சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை. பரிகாரம்: பால் சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57 அஸ்தமனம்: மாலை 6.27 ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 3 சந்திராஷ்டமம் ஆயில்யம் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கல்லூரி நண்பர்கள் தேடி வந்து பேசுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். ரிஷபம்: இங்கிதமாக பேசி எல்லோரையும் கவருவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உண்டு. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மா.கம்யூன்ஸிட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலை குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு, தனியார் மருத்துவர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராடிய கால்பந்து ரசிகர்கள் மீது கொல்கத்தா போலீஸ் தடியடி

கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று மோஹன் பகான் மற்றும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணிகளின் ரசிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும், உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ விவகாரம்: பிரதமர் மோடியை விமர்சித்த சரத் பவார்

மும்பை: பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி இருந்தார். இந்நிலையில், அதனை விமர்சித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார் பிரிவு) கட்சியின் தலைவர் சரத் பவார். கடந்த 16-ம் தேதி அன்று ஹரியாணா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருந்தும் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது என அறிவிக்கவில்லை. இந்த சூழலில் சரத் பவார் தெரிவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘போராட்டம் இன்னும் ஓயவில்லை’ - வினேஷ் போகத் உறுதி

புதுடெல்லி: டெல்லி திரும்பிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தனது போராட்டம் இன்னும் ஓயவில்லை என அவர் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்த பட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் பயணம் வெற்றி: 2 செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தம்

சென்னை: எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம்இஓஎஸ்-08 உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ‘எஸ்ஆர்-டெமோசாட்’ நானோ செயற்கைக் கோள் ஆகிய இரண்டையும் சிறிய ரக எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு: செப். 18-ல் தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 என 3 கட்டமாக அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹரியானாவில் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2 மாநிலங்களிலும் அக்டோபர் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதுதொடர்பாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 2024 மக்களவை தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டது. பெண்கள், இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களித்தனர். இத்தேர்தலில் பல வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகம் உலகம் முழுவதும் பறைசாற்றப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தா பேரணி முதல் மருத்துவர்களின் நாடு தழுவிய 24 மணி நேர ஸ்டிரைக் வரை: கொல்கத்தாவில் நடப்பது என்ன?

கொல்கத்தா: “கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்று தனது அரசு விரும்புகிறது. ஆனால், சிலரோ மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்களை பரப்புகிறார்கள்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம்: செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆகஸ்ட் 17-ல் நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்: இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது: கேஜ்ரிவால் வழக்கில் உச்ச நீதிமன்றம் மறுப்பு; சிபிஐ பதில் அளிக்க உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். மதுபான கொள்முதல், விநியோகம், பார்கள் போன்ற விஷயத்தில் புதிய கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் கைமாறியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

78-வது சுதந்திர தின விழா களைகட்டியது: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு

புதுடெல்லி / சென்னை: நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்க பெண் மருத்துவர் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க போலீஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை. எனவே வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவ படிப்பு பயின்ற பெண் மருத்துவர் (31) கடந்த 8-ம் தேதி இரவுபணியில் இருந்தார். அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையின் கருத்தரங்க கூடத்தில் தூங்கிய அவர், கடந்த 9-ம் தேதி காலையில் சடலமாக மீட்கப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்